பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் 11 தொகுதிகளில் எதிரெதிர் போட்டி

0
15

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகள், 11 தொகு​தி​களில் ஒரு​வரை எதிர்த்து ஒரு​வர் போட்​டி​யிடு​கின்​றனர். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.

பிஹார் சட்​டப்​பேர​வை தேர்​தலில் 2-வது மற்​றும் கடைசி கட்ட தேர்​தலில் போட்​டி​யிட வேட்பு மனு தாக்​கல் கடந்த 20-ம் தேதி​யுடன் முடிந்​தது. அப்​போது, 11 தொகு​தி​களில் இண்​டியா கூட்​டணி கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள் ஒரு​வரை எதிர்த்து ஒரு​வர் போட்​டி​யிட வேட்பு மனு தாக்​கல் செய்​துள்​ளனர். இதனால் இண்​டியா கூட்​ட​ணிக்​குள் மோதல் அதி​கரித்​துள்​ளது. அத்​துடன் வாக்​காளர்​கள் மத்​தி​யிலும் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது.

இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள முக்​கிய கட்சி ஆர்​ஜேடி 4 தொகு​தி​களில் காங்​கிரஸை எதிர்த்து போட்​டி​யிடு​கிறது. அதே​போல் விஐபி (வி​காஸ்​ஷீல் இன்​சான்) கட்​சியை எதிர்த்து 3 தொகு​தி​களில் ஆர்​ஜேடி வேட்​பாளர்​கள் வேட்பு மனு தாக்​கல் செய்​துள்​ளனர். அதே​போல் சிபிஐ கட்​சியை எதிர்த்து 4 தொகு​தி​களில் காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் மனு தாக்​கல் செய்​துள்​ளனர்.

வைஷாலி, சிக்​கந்​த​ரா, ககல்​காவ்ன், நர்​கடி​யாகஞ்ச், ராஜாபகர், பச்​வா​ரா,பிஹார்​ஷெரீப், கர்​கஹார், சைன்​பூர், பாபுபர்​ஹி, கவுரா பவுரா ஆகிய 11 தொகு​தி​களில் இண்​டியா கூட்​டணி கட்​சிகளின் வேட்​பாளர்​கள் ஒரு​வரை எதிர்த்து ஒரு​வர் போட்​டி​யிட உள்​ளனர். எனினும், வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்​ப​தால், இந்த தொகு​தி​களில் சிலர் வேட்பு மனுவை வாபஸ் பெறு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இரண்​டாவது கட்​டத் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு 15 நாட்​களுக்கு குறை​வாகவே உள்ள நிலை​யில், இண்​டியா கூட்​டணி கட்​சிகளின் பிரச்​சா​ரத்​தில் முக்​கிய தலை​வர்​கள் பலர் பங்​கேற்​காமல் உள்​ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here