15 நாளில் பதில் இல்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம்! – புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் பாஜக முன்னாள் அமைச்சர்

0
18

புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு சுமார் 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும் இன்னும் இலாகா ஒதுக்காமல் இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

இதனிடையே, பட்​டியல் இனத்​தைச் சேர்ந்த சாய் ஜெ.சர​வணன்​கு​மாரை அமைச்​சர​வையி​லிருந்து தூக்​கியது சர்ச்​சையை கிளப்​பியது. இந்த நிலை​யில், அரசுக்கு எதி​ராக பகிரங்​க​மாக வெடித்​திருக்​கும் சரவணன்​கு​மார், அமைச்​சர​வை​யில் பட்​டியல் இனத்​தவ​ருக்கு இடம் தரா​மல் ஒதுக்​கியது, கரசூரில் தொழிற்​சாலை​களை கொண்டு வரும் குழு​வில் தொகுதி எம்​எல்​ஏ​வான தன்னை சேர்க்​காமல் இருப்​பது உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​களை அடுக்கி இருக்​கி​றார். இதற்​கெல்​லாம் இன்​னும் 15 நாட்​களில் தீர்வு கிடைக்​கா​விட்​டால் தொகுதி மக்​களு​டன் சேர்ந்து சிறை நிரப்​பும் போராட்​டம் நடத்​து​வேன் என மிரட்​டி​யும் இருக்​கி​றார் சரவணன்​கு​மார்.

தேர்​தல் நெருங்​கும் வேளை​யில் ஆளும் கூட்​ட​ணி​யைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் ஒரு​வர் இப்​படி தடாலடி காட்டி இருப்​பது புதுச்​சேரி பாஜக​வில் மாத்​திரமல்​லாது ஆளும் கூட்​ட​ணிக்​குள்​ளும் புகைச்​சலை உண்​டாக்கி இருக்​கிறது. இதனிடையே, “சட்​டம் – ஒழுங்கு கெட்​டு​விட்​டது. உள்​துறை அமைச்​சர் நமச்​சி​வா​யம் இதில் கவனம் செலுத்​த​வில்​லை. என்​க​வுன்​ட்டர் நடத்தி ரவுடிகளை கட்​டுப்​படுத்த வேண்​டும்” என்​றும் சரவணன்​கு​மார் வெடித்​திருக்​கி​றார்.

இதுபற்றி உள்துறை அமைச்சர் நமச்சி​வா​யத்​திடம் கேட்டதற்கு, “அமைச்சராக இருக்​கும்​போதெல்லாம் பேசாமல் இருந்​து​விட்டு, தற்போது சாய் ஜெ.சர​வணன்​குமார் இப்படி பேசுவது ஏன்? என்கவுன்ட்டர் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தவிர, என்கவுன்ட்டர் பற்றி எம்எல்ஏ ஒருவரே பேசுவது அபத்த​மானது” என்றார்.

என்.ஆர்​.​காங்​கிரஸ் தரப்பில் பேசிய​வர்கள், “சாய் ஜெ.சர​வணன்குமாரின் ராஜினா​மாவுக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் எந்த சம்பந்​தமும் இல்லை. அதேசமயம், புதிதாக அமைச்​ச​ராக்​கப்பட்ட ஜான் குமார், லாட்டரி அதிபர் மார்ட்​டினின் மகனை புதுச்​சேரிக்கு அழைத்து வந்து அவரை வைத்து அரசை விமர்சனம் செய்வது ரங்கசாமிக்கு பிடிக்​க​வில்லை. இந்த விஷயத்தில் பாஜக தலைவர்கள் ஆழ்ந்த அமைதியில் இருப்பது தான் அவருக்கு இருக்கும் ஆகப்பெரிய வருத்தமே” என்கி​றார்கள்.

பாஜக வட்டாரத்​திலோ, “புதுச்சேரி பாஜகவில் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தான் இப்போது ஆதிக்கம் செலுத்​துகின்​றனர். இப்போது நடக்கும் உட்கட்சி மோதல்​களுக்கு அதுவும் முக்கிய காரணம்” என்கின்​றனர். சாய் ஜெ.சர​வணன்​குமார் நீண்ட காலமாக பாஜகவில் இருப்​பவர். நமச்சி​வாயம் காங்கிரஸில் இருந்து வந்தவர் என்பது குறிப்​பிடத்தக்கது.

பாஜகவுக்குள் நடக்கும் இந்த மோதலானது தேர்தல் வெற்றிக்கு வேட்டு​வைக்​கலாம் என்பதால் முன்னாள் அமைச்​சரையும் இந்நாள் அமைச்​சரையும் சமாதானப்​படுத்தும் முயற்​சியில் பாஜக மேலிடத் தலை​வர்கள் ஈடு​பட்​டிருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here