‘தொண்டர்களை நம்பித்தான் நான் இருக்கேன்..’ – நிர்வாகிகள் பயிற்சி கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்

0
18

தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக.வின் பகல்கனவு, திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என்றும் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி’ எனும் பெயரில் நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2019-ம் ஆண்டு முதல் நாம் எதிர்​கொண்ட அனைத்து தேர்​தல்​களி​லும், மகத்​தான வெற்​றிகளை பெற்​று​வ​ரு​கி​றோம். நமது வெற்​றிகள் எதிரி​களுக்கு கலக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. 2026 தேர்​தலிலும் நாம்​தான் வெற்​றி​பெற போகி​றோம். இதை ஆணவத்​தில் சொல்​ல​வில்​லை. உங்​கள் உழைப்​பின் மீதும், ஆட்​சி​யின் சாதனை​கள் மீதும், தமிழக மக்​கள் மீதும் வைத்​துள்ள நம்​பிக்​கை​யில் சொல்​கிறேன்.

இந்​தி​யா​வில் எந்த மாநில அரசும் நம் அளவுக்கு சாதனை​கள் செய்​திருக்​க​மாட்​டார்​கள். மீத​முள்ள சில வாக்​குறு​தி​களை​யும் நிச்​ச​யம் நிறை​வேற்றி தரு​வோம். பெரி​யார், அண்​ணா, கருணாநிதி ஆகி​யோர் ஏற்​படுத்​திய சுயமரி​யாதை உணர்​வால்​தான், பாஜக​வின் பாசிச ஆட்​சிக்கு அடிபணி​யாமல் எதிர்த்து நிற்​கி​றோம். இதனால்​தான் பாஜக.வுக்கு நம் மீது கோபம் வரு​கிறது. அதனால்​தான் பல்​வேறு சூழ்ச்​சிகளில் அவர்​கள் ஈடு​படு​கி​றார்​கள். இங்கு உங்​கள் அனை​வரை​யும் ஒன்​றாக பார்க்​கும்​போது, உங்​கள் முகங்​களில் உதயசூரியனை நான் காண்​கிறேன். அதை தமிழக மக்​களின் இதயசூரிய​னாக மாற்ற வேண்​டிய கடமை​யும், பொறுப்​பும் உங்​களுக்​கு​தான் உள்​ளது.

இந்த கூட்​டத்​துக்கு பின்பு அனை​வ​ரும் ஒருங்​கிணைந்து ‘என் வாக்​குச்​சாவடி – வெற்றி வாக்​குச்​சாவடி’ என்று முன்​னெடுக்க வேண்​டும். எனது வாக்​குச் சாவடி​யில் நடை​பெறவுள்ள கூட்​டத்​தில் பங்​கேற்​று, அங்கு நமது வெற்​றியை உறுதி செய்​வதற்​கான பரப்​புரை​யில் நிச்​சய​மாக நான் ஈடு​படப்​போகிறேன். அதே​போல், ஒவ்​வொரு ஒன்​றிய, பகு​தி, பேரூர் செய​லா​ள​ரும், தனக்​கு​கீழ் வரும் ஒவ்​வொரு பூத்​துக்​கும் தனித்​தனி கூட்​டங்​களை தின​மும் மாலை​யில் நடத்த வேண்​டும். இந்த கூட்​டங்​களில் அந்த வாக்​குச்​சாவடிக்கு உட்​பட்ட சார்பு அணி நிர்​வாகி​களில் இருந்​து, மாநில நிர்​வாகி​கள் வரை அனைத்து நிர்​வாகி​களும், தவறாமல் கலந்​து​கொள்ள வேண்​டும். ஒவ்​வொரு பூத்​துக்​கும் ஒரு டார்​கெட் நிர்​ண​யித்து கொள்​ளவேண்​டும். அதன் விவரங்​களை மாவட்​டச் செய​லா​ளர் மூல​மாக எனக்கு அனுப்பி வைக்க வேண்​டும்.

தேர்​தல் பணி​யாற்ற முதல் தேவை, ஆட்சி அமைக்க வேண்​டும் என்ற இலக்​கு. அதை நீங்​கள் அனை​வ​ரும் உள்​ளத்​தில் தாங்கி ஒற்​றுமை​யாக பணி​யாற்​றி​னால் 2026-ல் 7-வது முறை​யாக திமுக ஆட்சி அமைவது உறு​தி​யாகி​விடும். 2026-ல் நடை​பெறு​வது தனித்​தன்​மையோடு தலைநிமிர்ந்து நிற்​கும் நமது ஆட்​சி​யா? டெல்​லிக்கு வளைந்து கொடுக்​கும் அடிமை​களின் ஆட்​சி​யா? என்று தீர்​மானிக்​கும் தேர்​தல். எனவே, திமுக கூட்​டணி அனைத்து தொகு​தி​களை​யும் கைப்​பற்​றி​யாக வேண்​டும்.

தமி​ழ​கம் இப்​போது சமூக, அரசி​யல், பொருளா​தார படையெடுப்பை சந்​தித்து வரு​கிறது. பல்​வேறு வழிகளில் நமக்கு தொல்லை கொடுக்​கி​றார்​கள். இதை முறியடிக்​கும் வல்​லமை நமக்​கு​தான் இருக்​கிறது. பாஜக​வின் பகல்​க​னவு திமுக இந்த மண்​ணில் இருக்​கும்​வரை நிறை​வேறாது.தற்​போது வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​தத்தை காண்​பித்து மிரட்​டு​கி​றார்​கள். இதற்​கெல்​லாம் நாம் பணி​ய​மாட்​டோம். பட்​டியலினத்​தவர், சிறு​பான்​மை​யினர் உள்​ளிட்​ட​வர்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கி​விட்​டால், பாஜக.​வும் அதன் கூட்​டாளி​யான அதி​முக​வும் வெற்றி பெற்​று​விடலாம் என்று தப்​புக் கணக்கு போடு​கி​றார்​கள். எனவே, மக்​களின் வாக்​குரிமை​யையே பறிக்க துணி​யும் எஸ்​ஐஆர் செயல்​பாட்டை விழிப்​புடன் கண்​காணிக்க வேண்​டும். உண்​மை​யான வாக்​காளர் அனை​வ​ரும் பட்​டியலில் இடம்​பெறு​வதை உறு​தி​செய்ய வேண்​டும். ஒவ்​வொரு வாக்​குச்​சாவடி​யிலும் மக்​களின் உரிமை​களைக் காக்க வேண்​டிய​வர்​கள் திமுக​வினரும் – தோழமைக் கட்​சி​யினரும்​தான்.

எதிர்க்​கட்சி தலை​வ​ராக இருக்​கும் பழனி​சாமி, பெயரளவுக்​காவது திரா​விட கட்​சி​யாக இருந்த அந்​தக் கட்​சி​யை, அமித்​ஷா​விடம் விழுந்து சரண்​டர் செய்​து​விட்​டார். அந்​தக் கூட்​ட​ணியை தமிழக மக்​களும் விரும்​ப​வில்​லை. அவர்​கள் கட்​சி​யினரும் விரும்​ப​வில்​லை. மற்ற கட்​சி​யினரும் அந்​தக் கூட்​ட​ணிக்கு செல்​ல​வில்​லை. தமி​ழ​கத்​துக்கு எதி​ராக கூட்​டணி அமைத்​துள்ள அவருடைய சந்​தர்ப்​ப​வாதத்தை மக்​களிடம் எடுத்​துச் சொல்​லி, அவர்​களின் நம்​பிக்​கை​யைப் பெற்​று, அதை நம்​முடைய கூட்​ட​ணிக்​கான வாக்​கு​களாக மாற்ற வேண்​டும். நாம் 7-வது முறை​யும் ஆட்​சியை பிடிப்​பதுடன், தமி​ழ​கத்தை நிரந்​தர​மாக ஆளும் தகு​தி, திமுக​வு-க்கு தான் உள்​ளது என்​பதை நிரூபிக்க வேண்​டும். இந்த செய்​தியை தொண்​டர்​கள் அனை​வ​ருக்​கும் கொண்டு சேர்த்து தேர்​தல் வெற்​றிக்​காக உழைக்க வேண்​டும். தொண்​டர்​களை​ நம்​பித்​தான் நான் இருக்​கேன் என்​பதை மறந்​து​விட வேண்​டாம்.இவ்​வாறு அவர் பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here