ஆறுதல்கூட கூறாமல் தப்பியோடிய தலைவரை பார்த்ததில்லை: திமுக எம்பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா விமர்சனம்

0
14

ஒரு கட்​சித் தலை​வர் ஆறு​தல்​கூட சொல்​லாமல் தனது பாது​காப்பை மட்​டும் நினைத்து பயந்து சென்​றதை இது​வரை பார்த்​த​தில்லை என்று திமுக எம்​.பி. கனிமொழி தெரி​வித்​துள்​ளார். மேலும், ஆதவ் ஆர்​ஜூனா மீது ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்லை என ஆ.ராசா எம்​.பி. கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து திமுக துணை பொதுச்​செய​லா​ள​ரும், நாடாளு​மன்ற குழுத் தலை​வரு​மான கனி​மொழி சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கரூரில் நடந்த துயரச் சம்​பவத்​தில் 41 பேர் இறந்​ததுடன், தற்​போதும் பலர் உயிருக்கு போராடி வரு​கின்​றனர். இந்த விவ​காரத்​தில் அரசி​யல் மனமாச்​சா​ரி​யங்​களைத் தாண்டி முதல்​வர் ஸ்டா​லின் உடனே கரூர் சென்​று, பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​தித்​ததுடன் நிவாரண​மும் வழங்​கச் செய்​தார்.

பாதிக்​கப்​பட்ட மக்​களு​டன் நின்​றது திமுக​வும், தமிழக அரசும் தான். இந்த சம்​பவத்​தில் யார் மீது தவறு இருக்​கிறது என்​பது விசா​ரணை​யில் நிச்​ச​யம் தெரிய​வரும். ஆனால், கரூரில் இத்​தனை பிரச்​சினை நடந்​ததற்கு பிறகும், ஒரு கட்​சி​யின் தலை​வர் ஆறு​தல்​கூட சொல்​லாமல் அங்​கிருந்து புறப்​பட்​டதும், தன் பாது​காப்பை மட்​டும் நினைத்​ததும் இது​வரை நான் பார்த்​தி​ராத ஒன்​று. அவரால் முடிய​வில்லை என்​றால் கூட அடுத்​தகட்ட தலை​வர்​கள் மக்​களு​டன் நின்​றிருக்க வேண்​டும்.

திமுக உள்​ளிட்ட பிற கட்​சிகளைச் சேர்ந்த 2-ம்​கட்ட தலை​வர்​கள் மக்​களு​டன் நிற்​கிறார்​கள். அடுத்​தகட்ட தலை​வர்​களோ, மாவட்ட நிர்​வாகி​களோ கூட மக்​களை வந்து சந்​திக்​காமல், உதவி​களைச் செய்​யா​திருப்​பது மனி​தாபி​மானமற்ற செயல். மக்​களைப் பற்​றி​யும், அவர்​களின் பாது​காப்பை பற்​றி​யும் தான் நினைக்க வேண்​டுமே தவிர, வன்​முறையை தூண்​டு​வது போல் பேசுவது நிச்​சய​மாக உச்​சகட்ட பொறுப்​பின்​மை​யாகும்.

ஒரு பிரச்​சினையை அமை​தி​யாக்​கு​வது தான் எந்த அரசி​யல் கட்​சிக்​கும் அழகு. வன்​முறையை தூண்​டும் பேச்​சுகளை தவிர்க்க வேண்​டும். அப்​படி செய்​பவர்​களாக இருந்​தால், அவர்​கள் அரசி​யல் ஆதா​யம் தேடு​கிறார்​கள் என்றே கருத வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இதே​போல் ஆ.ராசா கூறிய​தாவது: எப்​போது மக்​களுக்கு தேவை வரு​கிறதோ, அப்​போது எங்​கள் உயிரை​யும் பணை​யம் வைத்து களத்​திலே போய் நிற்​பது​தான் திமுக வரலாறு. கரோனா காலக்​கட்​டம் தொடங்கி பல்​வேறு சம்​பவங்​களை உதா​ரண​மாக கூறலாம். அது​போல​வே, இப்​போதும் எங்​கள் முதல்​வரும் செய்​திருக்​கிறார். இதிலே அரசி​யல் கிடை​யாது. ஆனால், இப்​படி களத்​திலே நிற்க வேண்​டிய அந்த கட்​சி​யின் தலை​வர் பயந்து கொண்டு ஏன் சென்​னைக்கு வந்​தார்? அவர் ஒரு பிரபல​மான நடிகர்.

அவர் இருந்​தால் மீண்​டும் கும்​பல்​கூடும். எனவே, அவர் திருச்​சி​யில் தங்கி கொண்​டு, நிர்​வாகி​களை கொண்டு பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆறு​தல் கூறி நிவாரணம் வழங்​கி​யிருக்​கலாமே, அவர்​களிடம் குற்​றவுணர்வு இருக்​கிறது. அதனால் அவர்​கள் ஓடிவந்​து​விட்​டார்​கள் என்​பது​தான் உண்​மை.

ஆதவ் அர்ஜுனா மீது புகார்: இதுத​விர தவெக நிர்​வாகி ஆதவ் அர்​ஜுனா ஒரு பதிவை போடு​கிறார். அதில் நேபாளத்​தில் நடந்​தது போல, இங்கு ஒரு புரட்சி நடக்​கும் என்​கிறார். அரசி​யலமைப்​புக்கு எதி​ரான ஒரு கருத்தை பதி​விட்​டு, அதற்கு விமர்​சனம் வந்​தவுடனே எடுக்​கிறார். இப்​படிபட்ட பதிவு​களை போடு​கிற ஒரு​வரை கண்​டிக்​காமல், கட்​சியை விட்டு நீக்​காமல் விஜய் வைத்​துக் கொண்​டிருக்​கிறார். எனவே, அரசி​யல் புரிதல் இல்​லாமல் சிறு​பிள்​ளைத்​தன​மாக இப்​படி நடந்​து கொள்​வது, தமிழகத்​துக்​கு நல்​லதல்​ல. இவ்​வாறு அவர்​ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here