தனிநபர் கனவுகளை ‘சிபில் ஸ்கோர்’ சிதைப்பது எப்படி? – மாநிலங்களவையில் கனிமொழி என்விஎன் சோமு விவரிப்பு

0
11

“சிபில் ஸ்கோர் என்ற 3 இலக்க எண் மூலம் கோடிக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரத்​துடன் தனி​யார் அமைப்​பு​கள் விளை​யாடி வரு​கின்​றன” என்று மாநிலங்​களவை​யில் திமுக எம்.பி. டாக்​டர் கனி​மொழி என்​விஎன் சோமு கண்​டனம் தெரிவித்துள்​ளார்.

மாநிலங்​களவை​யில் பூஜ்ய நேரத்​தின் போது திமுக எம்​.பி.கனி​மொழி என்​விஎன் சோமு பேசி​ய​தாவது: கோடிக்​கணக்​கான இந்திய மக்​களில் மாணவர்​கள், இளம் தொழில் முனை​வோர், பெண்​கள், விவ​சா​யிகள் என யார் கடன் கேட்டு அணுகி​னாலும் சிபில் ஸ்கோர் என்ற 3 இலக்க எண்ணை வைத்​துக் கொண்டு வங்கி​கள் நடந்து கொள்​ளும் விதம் பெரும்​பாலான இந்​தி​யர்​களின் கனவு​களைச் சிதைக்​கிறது.

ஒரு​வரின் வரு​மானம், சமூக அந்​தஸ்​து, தனி நபர் சுதந்​திரம், மரி​யாதை, மனித உணர்​வு​கள்​ இவை எல்​லா​வற்​றை​யும் விட இந்த சிபில் ஸ்கோர்​தான் பிர​தானம் என்ற அவல நிலை இந்த நாட்​டில் நில​வு​கிறது.

சிபில் ஸ்கோரை காரணம் காட்டி சர்வ சாதா​ரண​மாக கடன் விண்​ணப்​பங்​களை வங்​கி​களும் வங்​கி​கள் அல்​லாத கடன் நிறு​வனங்​களும் நிராகரிக்​கின்​றன. இவ்​வளவு முக்​கி​யத்​து​வத்தை எப்படியோ பெற்​று​விட்ட இந்த சிபில் ஸ்கோரை தீர்​மானிக்​கும் நிறு​வனத்தை கண்​காணிக்​கவோ, கட்​டுப்​படுத்​தவோ, முறைப்படுத்​தவோ அரசின் சார்​பாக ஏதேனும் ஏற்​பாடு இருக்கிறதா என்​பது பற்​றி​யும் தெளி​வு இல்​லை.

நம்​முடைய சிபில் ஸ்கோரை இவர்​கள் எப்​படி தீர்​மானிக்​கிறார்​கள் என்​பதும் புரிய​வில்​லை. அது சரியா நடக்​கிற​தா? என்ன அளவு​கோல்? யார் இதைத் தீர்​மானிக்​கிறார்​கள்? அங்கே தவறுகள் இல்​லாமல் இது நடக்​கிறதா என்​பது யாருக்​கும் வெளிப்படையாகத் தெரி​யாது. தன்னுடைய விஷ​யத்​தில் தவறாக சில விஷ​யங்​களை முடிவு செய்​திருக்​கிறார்​கள் என்று நினைக்கும் ஒரு நபர், யாரை அணுகி அந்​தத் தவறை சரி செய்​வது என்​ப​தி​லும் எளிமை​யான வழிகள் இல்​லை.

படித்​தவர்​களின் நிலையே இப்​படி என்​றால், கடனுத​வி​யால்​தான் வாழ்க்​கையை அடுத்த கட்​டத்​துக்கு நகர்த்த முடி​யும் என்ற நிலை​யில் உள்ள பாமரர்​களின் நிலை என்ன? அதி​லும் தவறை சரி செய்​யும் பொறுப்பை அந்த நிறு​வனம் ஏற்​காது. அந்​தத் தனி நபரே சரி செய்ய வேண்​டு​மாம்.

இந்த நிலை​யில், உங்​கள் சிபில் ஸ்கோரை எப்​படி அதி​க​மாக வைத்​திருப்​பது? குறை​யாமல் பார்த்​துக் கொள்​வது எப்​படி என்ற கோஷங்​களு​டன் சில தனி​யார் நிறு​வனங்​களும் களத்​தில் இறங்கியிருக்​கின்​றன. அதற்கு ஒரு பெரும் தொகை​யைக் கட்டணமாக​வும் வசூலிக்​கின்​றன. இவர்​கள் யார்? இவர்​களுக்கு இந்த அனு​ம​தி​யைத் தந்​தது யார் எது​வும் தெரி​யாது. தங்​கள் சிபில் ஸ்கோரில் செய்​யப்​பட்ட தவறுகளைச் சரி செய்​யவே அப்​பாவி மக்​கள் பணம் செல​விட வேண்டி உள்​ளது​தான் வேதனை​யான விஷ​யம்.

நிதி மேலாண்மை உள்​ளிட்ட எந்த விஷய​மும் இயந்திரங்களாலோ, கணக்​கீடு​களாலோ மட்​டும் முடிவு செய்யப்படு​வ​தில்​லை. மனித உணர்​வு​களை, தனி மனித சூழல்​களை​யும் கவனத்​தில் கொண்டு முடி​வெடுக்க வேண்​டும்.

எனவே, சிபில் ஸ்கோர் விஷ​யத்தை முழு​மை​யாகக் கண்​காணித்து கட்டுப்​படுத்​தும் வகை​யில், சட்​டப்​பூர்​வ​மான, வெளிப்​படைத் தன்மை​யுடன் கூடிய ஓர் அமைப்பை மத்​திய அரசு ஏற்​படுத்த வேண்​டும்.

அப்​படிச் செய்​தால் மட்​டுமே தவறுகள் நடை​பெறாமலும், தவறுகள் ஏற்​பட்​டாலும் எளி​தில் சரிசெய்​யும் வாய்ப்​பும் ஏற்​படும். அத்​துடன் வங்​கி​கள் கடன் வழங்​கும்போது இயந்​திரத்​தன​மாகச் செயல்​ப​டா​மல், மனித உணர்​வு​களை மதித்​துச் செயல்​பட​வும் அது வழி​வகுக்​கும்.

கடன் வழங்​கு​வது என்​பது மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை உயர்த்​தி, சமூக அதி​காரத்தை அவர்​களுக்கு வழங்​கு​வ​தாக இருக்க வேண்டுமே தவிர, லாபத்தை மட்​டுமே கணக்​கில் கொண்​ட​தாக இருக்​கக் கூடாது. நம் குடிமக்​களின் நிதி சார்ந்த கவுர​வத்தை கட்டுப்​பாடற்ற, வெளிநபர்​கள்​ தீர்​மானிப்​ப​தை அனுமதிக்கக் கூடாது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here