இண்​டிகோ விமான சேவை முடங்கிய​போது பிற நிறுவனங்கள் கட்டணங்​களை பல மடங்கு உயர்த்தி​யது எப்​படி? – ஐகோர்ட்

0
14

இண்​டிகோ விமான சேவை முடங்​கிய​போது பிற நிறு​வனங்​கள் கட்​ட​ணங்​களை பல மடங்கு உயர்த்​தி​யது எப்​படி என டெல்லி உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்பி உள்​ளது.

விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகத்​தின் (டிஜிசிஏ) புதிய பணி நேர விதி​கள் (எப்​டிடிஎல்) காரண​மாக, நாடு முழுவதும் இண்​டிகோ விமான சேவை கடந்த வாரம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. பின்​னர் மத்​திய அரசு தலை​யிட்​டதையடுத்து நிலைமை சீரடைந்து வரு​கிறது. எனினும், 9-வது நாளான நேற்​றும் பல விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

இதனிடையே, இந்த விவ​காரம் தொடர்​பாக நீதி விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்​திர குமார் உபாத்​யாயா மற்​றும் நீதிபதி துஷார் ராவ் கெடிலா அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்போது மத்​திய அரசு சார்​பில் ஆஜரான கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரலைப் பார்த்து நீதிப​தி​கள் கூறும்​போது, “இது​போன்ற ஒரு சூழ்​நிலை ஏற்​பட்​டது ஏன்? இதற்கு யார் பொறுப்​பு? விமான நிலை​யங்​களில் பயணி​கள் அவதிக்​குள்​ளா​யினர் என்​பது ஒரு​புறம் இருந்​தா​லும், அவர்​களுக்கு பொருளா​தார இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

இண்​டிகோ விமான சேவை முடங்​கிய​போது, மற்ற நிறு​வனங்​கள் சூழ்​நிலையை தங்​களுக்கு சாதக​மாக பயன்​படுத்​திக்​கொள்ள அனு​ம​தித்​தது எப்​படி? டெல்​லி-​மும்​பை, டெல்​லி-பெங்​களூரு, டெல்​லி-சென்னை உள்​ளிட்ட முக்​கிய வழித்​தடங்​களில் கட்​ட​ணங்​கள் பல மடங்கு (ரூ.39 ஆயிரம் வரை) உயர்ந்​தது எப்​படி? கட்டண உயர்​வைத் தடுக்​க​வும் பாதிக்​கப்​பட்ட பயணி​களுக்கு உதவும் வகை​யிலும் மத்​திய அரசு மேற்​கொண்ட நடவடிக்கை என்​ன?” என அடுக்​கடுக்​கான கேள்வி​களை எழுப்​பினர்.

இதையடுத்து கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் சேத்​தன் வாதிடும்​போது, “இந்த விவ​காரத்​தில் விளக்​கம் கேட்டு இண்​டிகோ நிறு​வனத்​துக்கு ஏற்​கெனவே நோட்​டீஸ் அனுப்​பப்​பட்டு விசா​ரணை நடை​பெறுகிறது. கட்டண உயர்​வைத் தடுக்க உடனடி​யாக கட்டண உச்ச வரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டது” என்​றார். இதையடுத்து வழக்​கின் விசா​ரணை தள்ளி வைக்​கப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here