ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா தோல்வி கண்டு வெளியேறினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் புத்ரி குஸுமா வர்தானி 21-7, 21-13 என்ற நேர் செட்களில் இந்தியாவின் உன்னதி ஹூடாவை வீழ்த்தினார்.














