“தோனி, ரோஹித் வரிசையில் இணைந்தது மகிழ்ச்சி” – சூர்யகுமார் யாதவ்

0
22

ஐசிசி டி20 உலகக் கோப்​பையை வென்று கொடுத்​துள்ள எம்​.எஸ்​.தோனி, ரோஹித் சர்​மாவுடன் இணைந்​துள்​ளது மிகுந்த மகிழ்ச்​சி​யளிப்​ப​தாக இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்யகுமார் யாதவ் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பையை எம்​.எஸ்​.தோனி தலை​மையி​லான இந்​திய அணி வென்​றிருந்​தது. இதன் பின்​னர் கடந்த 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலை​மையி​லான இந்​திய அணி கோப்​பையை வென்று அசத்​தி​யது. இந்த வரிசை​யில் தற்​போது 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்​பைத் தொடரில் சூர்​யகுமார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி சாம்பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்​ளது.

அகம​தா​பாத்​தில் இருந்து நேற்று மும்பை திரும்​பிய இந்திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் கூறியதாவது: டி20 உலகக் கோப்​பையை 2024 மற்​றும் 2026 என அடுத்​தடுத்து வெல்​வது மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்கிறது. இது மிகச்​சிறந்த உணர்​வு. நாங்​கள் 2024-ல் வென்​ற​போது, மீண்​டும் ஒரு​முறை 2026-ல் நமது சொந்த மண்​ணிலேயே வென்​றால் மிக​வும் சிறப்​பான​தாக இருக்கும் என்று நினைத்​தோம்

அடுத்த இலக்கு 2028-ம் ஆண்டு நடை​பெறும் ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வெல்​வது​தான். இந்​திய அணி தற்​போது நல்ல உத்​வேகத்​துடன் உள்​ளது. 2028-ம் ஆண்​டில் நடை​பெறும் டி20 உலகக் கோப்​பையை​யும் இந்​திய அணி வென்றால், மிக​வும் சிறப்​பாக இருக்​கும்.

டி20 உலகக் கோப்​பையை வென்ற கேப்​டன்​களில் ரோஹித் சர்மா மற்​றும் தோனி ஆகியோரது வரிசை​யில் நானும் இணைந்​துள்​ளது மிகுந்த மகிழ்ச்​சி​யளிக்​கிறது. இவர்​களு​டன் இணைந்​துள்ள தருணத்தை நான் மெல்ல உணரத் தொடங்​கு​கிறேன்.

மிகப் பெரிய வீரர்​களான இவர்​களு​டன் நானும் இடம்​பெறு​வது மிகுந்த மகிழ்ச்​சி​யளிக்​கிறது. எதிர்​காலத்​தி​லும் நான் இதையே செய்ய முயற்​சிப்​பேன், இந்​திய அணி அதிக கோப்​பைகளை வெல்ல தொடர்ந்து உதவுவேன். டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்​ன​தாக நான், தோனியை சந்​தித்​தேன். அப்​போது அவர், ஐசிசி தொடரை எப்​படி அணுகவேண்​டும் என கற்​றுக்​கொடுத்​தார்.

நம்​மிடம் சிறந்த அணி இருக்​கிறது, நாம் தைரிய​மாகச் செயல்​பட்​டால் நிச்​ச​யம் வெற்றி பெறு​வோம் என்று அவர் என்​னிடம் கூறி​னார். வெற்​றிக்​குப் பிறகு அவரது ரியாக் ஷன் அற்​புத​மாக இருந்​தது. உலக சாம்​பியன்​களான அந்த இரவில் நாங்​கள் செய்த அனைத்​தை​யும் உங்​களோடு பகிர்ந்து கொள்ள விரும்​பு​கிறேன். நாங்​கள் காலை 8 மணி வரை விழித்​திருந்து நேரத்​தைக் கழித்​தோம்.

தற்​போதைய திட்​டம் சிறிது காலம் ஓய்​வெடுக்க வேண்டும். அதன் பிறகு ஐபிஎல் தொடருக்​குத் தயாராவேன். அடுத்த சுழற்​சி​யில் நாங்​கள் ஒலிம்​பிக் போட்​டிகளுக்​காகத் தயா​ராவோம். அங்கு தங்​கம் வெல்வதே எங்​களது முக்​கிய குறிக்​கோளாக இருக்​கும். இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here