மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா, கேரளா, பஞ்சாப் அரசுகள் வாதம்

0
36

மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் அவற்றை கால​வரை​யின்றி ஆளுநர்​கள் நிறுத்தி வைக்க முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் கர்​நாட​கா, கேரளா, பஞ்​சாப் மாநில அரசுகள் நேற்று வாதிட்​டன. மசோ​தாக்​களுக்கு 3 மாதங்​களுக்​குள் ஒப்​புதல் அளிக்க ஆளுநர்​களுக்​கும், குடியரசுத் தலை​வருக்​கும் காலக்​கெடு விதித்த விவ​காரத்​தில் குடியரசுத் தலை​வர் எழுப்​பி​யுள்ள கேள்வி​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இதில் கர்​நாடக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் கோபால் சுப்​ரமணி​யம் நேற்று வாதிடு​கை​யில், ‘‘குடியரசுத் தலை​வர் எழுப்பியுள்ள கேள்வி​களுக்கு உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே அளித்த தீர்ப்​பு​களில் விடை உள்​ளது.

அரசமைப்பு சட்​டத்​துக்கு முரணாக மசோதா மீது ஆளுநர் வீட்டோ அதி​காரத்தை கொண்​டிருக்க முடி​யாது. இந்த விவ​காரத்​தில் மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரலின் வாதம் முரண்​பா​டாக உள்​ளது. மத்​திய அரசுக்கு அதி​காரப்​பூர்​வ​மாக தலைமை வகிக்​கும் குடியரசுத் தலை​வர், மத்​திய அமைச்​சர​வை​யின் ஆலோ​சனை​யின்​படி செயல்பட வேண்​டும்.

மறுஆய்வு செய்யலாம்: சட்​டத்தை இயற்​றும் பொறுப்பு சட்​டமன்​றத்​திடம் உள்​ளது. குடியரசுத் தலை​வர், ஆளுநர் பதவி​கள் அடை​யாளப் பதவி​களாகும். இவர்​கள் அமைச்​சரவை ஆலோ​சனைப்​படியே செயல்பட வேண்​டும். இதை உச்ச நீதி​மன்​ற​மும் வலியுறுத்​தி​யுள்​ளது.

குடியரசுத் தலை​வர் பிரதமரையோ, ஆளுநர்​கள் முதல்​வர்​களையோ மீறி செயல்பட முடி​யாது. குடியரசுத் தலை​வர் எழுப்​பி​யுள்ள கேள்வி​கள், தமிழ்​நாடு ஆளுநர் வழக்​கில் அளித்​துள்ள தீர்ப்பை ரத்து செய்​யாது. தீர்ப்பை மறுஆய்வு செய்ய மனு தாக்​கல் மட்​டுமே செய்ய முடி​யும்’’ என்​றார்.

கேரள அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் கே.கே.வேணுகோ​பால் வாதிடு​கை​யில், ‘‘மசோ​தாக்​கள் மீது ஆளுநர்​கள் உடனடி​யாக முடி​வெடுக்க வேண்​டும். கிடப்​பில் போடக்​கூ​டாது. மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் நிறுத்தி வைக்​கும் பட்​சத்​தில், மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க அமைச்​சரவை ஆலோ​சனை வழங்​கலாம். குடியரசுத் தலை​வரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்​கும் பரிந்​துரையை மாநில அரசே வழங்க முடி​யும்.

மசோ​தாக்​கள் முரண்​பாடு கொண்​டிருந்​தால் ஒப்​புதல் அளிக்​கும் முடிவை குடியரசுத் தலை​வரும், ஆளுநரும் தாமதப்​படுத்த முடியும் என்ற மத்​திய அரசின் வாதம் ஏற்​கும்​படி இல்​லை. மசோ​தாக்​களை ஆரா​யும் அதி​காரம் நீதி​மன்​றங்​களிடம் மட்​டுமே உள்​ளது’’ என்​றார்.

பஞ்​சாப் மாநில அரசின் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் அர்​விந்த் தத்​தர், ‘‘மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் ஆளுநர் கால​வரையின்றி நிறுத்தி வைக்க முடி​யாது. சட்​ட​மாகும் மசோ​தா​வின் செல்​லு ​படிதன்​மையை முடிவு செய்ய ஆளுநர் ஒப்​புதல் அளிக்காமல் இருக்க முடி​யாது. மசோதா ஒப்​புதல் அளிக்க 3 மாதம் கால நிர்​ண​யம் செய்த உச்ச நீதி​மன்ற தீர்ப்பு அவசி​ய​மானது. இது தெளிவை தந்​துள்​ளது’’ என வாதிட்​டார்.

மாணவர் சேர்க்​கை: பல்​வேறு விவ​காரங்​களில் கால நிர்​ண​யம் செய்​வது, வழக்​கு​கள் தாக்​கல் செய்ய வழி​வகுப்​ப​தாக நீதிபதி பி.எஸ். நரசிம்மா குறிப்​பிட்​டார். இதற்கு மூத்த வழக்​கறிஞர் அர்​விந்த் தத்​தர், ‘‘மருத்​து​வக் கல்வி மாணவர் சேர்க்​கை, வரி வழக்கு போன்​றவற்​றில் கால நிர்​ண​யம் அவசி​யமாகிறது.

அவசி​ய​மான நேரத்​தில் 24 மணி நேரத்​துக்​குள் மசோ​தாவுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்க வேண்​டி​யிருக்​கும்’’ என வா​திட்​டார். தெலங்​கானா தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் நிரஞ்​சன் ரெட்​டி, அமைச்​சரவை ஆலோ​சனைப்​படியே ஆளுநர் நடக்க வேண்​டும்​ என வா​திட்​டார்​. வாதங்​கள்​ இன்​றும்​ தொடர்​கின்​றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here