பாமக இளைஞர் சங்கத் தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்க்குமரன் மீண்டும் நியமனம்

0
22

பாமக இளைஞர் சங்​கத் தலை​வ​ராக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்​குமரனை நிறு​வனர் ராம​தாஸ் மீண்​டும் நியமித்​துள்​ளார். பாமக தலை​வர் பதவி​யில் இருந்து வெளி​யேற்​றப்​பட்ட ஜி.கே.மணியை ஆறு​தல்​படுத்​தும் வகை​யில், அவரது மகன் தமிழ்​குமரனுக்கு மாநில இளைஞர் சங்​கத் தலை​வர் பதவியை நிறு​வனர் ராம​தாஸ் வழங்​கி​னார்.

ஆனால், அன்​புமணி​யின் எதிர்ப்பு காரண​மாக தமிழ்க்​குமரன் பதவியி​லிருந்து வில​கி​னார். பின்​னர், ராம​தாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்​தி​யின் மகன் முகுந்​தன் இளைஞர் சங்​கத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். இதற்​கும் அன்​புமணி கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​து​வந்த நிலை​யில், 5 மாதங்​களில் முகுந்​தனும் பதவி வில​கி​னார். இந்த விவ​காரம் தொடர்​பாக ராம​தாஸ்​-அன்​புமணிக்​கிடையே கடும் மோதல் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், பாமக இளைஞர் சங்​கத் தலை​வ​ராக ஜி.கே.மணி மகன் தமிழ்​குமரனை கட்சி நிறு​வனர் ராம​தாஸ் மீண்​டும் நியமித்​துள்​ளார். இதற்​கான கடிதத்தை தைலாபுரத்​தில் ராம​தாஸ் நேற்று தமிழ்க்​குமரனிடம் வழங்​கி​னார். பின்​னர் ராம​தாஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அன்​புமணி​யின் எதிர்ப்பு காரண​மாக ஏற்​கெனவே தமிழ்க்​குமரன் பதவி வில​கி​னார்.

பின்​னர் அப்​ப​த​வியை எனது பேரன் முகுந்​தனுக்கு வழங்​கினேன். இதனால் மேடை​யிலேயே என் மீது ‘மைக்’ பாய்ந்​தது. இப்​போது அதே பொறுப்பை தமிழ்​குமரனுக்கு மீண்​டும் வழங்கி இருக்​கிறேன். அவர் சிறப்​பாக பணி​யாற்ற வாழ்த்​துகிறேன். பாமக​வினர் அனை​வரும் தமிழ்​குமரனுக்கு உறு​துணை​யாக இருக்க வேண்​டும்.

கரூரில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கல். அரசி​யல் கட்​சிக் கூட்​டங்​களை நடத்​தும்​போது, ஒரு உயிரைக்​கூட இழக்​காத வகை​யில் எச்​சரிக்​கை​யுடன் செயல்பட வேண்​டும். காவல் துறை​யினர் கண்​டிப்​புடன் வழி​காட்ட வேண்​டும். கரூர் சம்​பவத்​தில் ஒரு முதல்​வர் என்ன செய்ய வேண்​டுமோ, அதை ஸ்டா​லின் செய்​துள்​ளார். இவ்​வாறு ராம​தாஸ் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here