களியக்காவிளை அருகே உள்ள செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிய கல்வி ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பேனா, புத்தகப் பை, குடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்க அறிவுரை வழங்கி ஆசி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோயில் மேல்சாந்தி குமார், வக்கீல் ஜெயசந்திரன், நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
