முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

0
23

முன்​னாள் மத்​திய அமைச்​சர் சிவ​ராஜ் பாட்​டீல் (90) மகா​ராஷ்டிர மாநிலத்​தில் நேற்று கால​மா​னார்.

மகா​ராஷ்டிர மாநிலம் லாத்​தூரை சேர்ந்​த வர் சிவ​ராஜ் பாட்​டீல். காங்​கிரஸ் கட்​சியை சேர்ந்த இவர் 1972-ம் ஆண்டு முதல் முறை​யாக மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைக்கு தேர்வு செய்​யப்​பட்​டார். 2 முறை எம்​எல்​ஏ​வாக இருந்​த​போது, முதலில் துணை சபா​நாயக​ராக​வும், பின்​னர் சபா​நாயக​ராக​வும் பதவி வகித்​துள்​ளார்.

இதைத் தொடர்ந்து தேசிய அரசி​யலுக்கு வந்த அவர், 1980-ம் ஆண்டு முதல் முறை​யாக லாத்​துார் தொகு​தி​யில் இருந்து மக்​களவைக்​குத் தேர்வு செய்​யப்​பட்​டார். சிவ​ராஜ் பாட்​டீல் 2004 முதல் 2008 வரை மத்​திய உள்​துறை அமைச்​ச​ராக​வும், 1991 முதல் 1996 வரை மக்​கள​வைத் தலை​வ​ராக​வும் இருந்​தார். மேலும், பஞ்​சாப் மாநில ஆளுந​ராக​வும் பதவி வகித்​துள்​ளார்.

கடந்த சில ஆண்​டு​களாக தீவிர அரசி​யலில் இருந்து விலகி ஓய்​வில் இருந்த சிவ​ராஜ் பாட்​டீல், நேற்று லாத்​துாரில் அவரது இல்​லத்​தில் கால​மா​னார். நீண்ட கால​மாக அவர் உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்டு இருந்​தார். முன்​னாள் மத்​திய அமைச்​சர் சிவ​ராஜ் பாட்​டீல் மறைவுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, சோனி​யா ​காந்​தி, ராகுல் காந்​தி உள்ளிட்ட காங்​கிரஸ் தலை​வர்​கள், பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here