ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பத்ம பூஷன் விருது பெற்றவருமான விஜய்பத் சிங்கானியா (87) மும்பையில் காலமானார்.
விஜய்பத் இறுதிச் சடங்கு நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. அவருக்கு மனைவி ஆஷாதேவி மற்றும் மதுபதி, ஷெபாலி ருயியா, கவுதம் ஆகிய பிள்ளைகள் உள்ளனர். ஆண்களுக்கான ஆடைத் துறையில் ரேமண்ட் நிறுவனத்தை நம்பகமான பிராண்டாக மாற்றியதில் விஜய்பத் முக்கிய பங்கு வகித்தார். ஒரு சிறந்த விமானியான விஜய்பத் சிங்கானியா, ஹாட் ஏர் பலூனில் அதிக உயரத்துக்குச் சென்றவர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.














