மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து போட்டி நிறுத்தம்

0
19

வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​களுக்கு இடையி​லான உலகக் கோப்பை கால்​பந்து தகு​திச் சுற்று போட்​டி​யின் போது மைதானத்​துக்​குள் எலி நுழைந்​த​தால் ஆட்​டம் சிறிது நேரம் தாமத​மானது.

வேல்ஸ் நாட்​டின் கார்​டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டத்​தில் வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​கள் மோதின. பெல்​ஜி​யம் 2-1 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது திடீரென கோல் கீப்​பர் திபோ கோர்​டோ​யிஸ் பகு​தி​யின் அருகே எலி ஒன்று மைதானத்​துக்​குள் நுழைந்​தது.

இதனால் ஆட்​டம் சிறிது நேரம் தடைபட்​டது. எலியை, திபோ கோர்​டோ​யிஸ் கையால் பிடிக்க முயன்​றார். ஆனால் அவரிடம் இருந்து எலி தப்பி துள்ளி துள்ளி ஓடியது. இறு​தி​யாக வேல்ஸ் அணி​யின் முன்கள வீரரான பெர்​னன் ஜாண்​சன் சைடுலைனை நோக்கி எலியை வெளியே விரட்​டி​னார். இதன் பின்​னர் ஆட்​டம் தொடர்ந்து நடை​பெற்​றது.

இந்த ஆட்​டத்​தில் பெல்​ஜி​யம் 4-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. பெல்​ஜி​யம் அணி தரப்​பில் கெவின் டி ப்ரூய்ன் 2 கோல்​களும் (18, 76-வது நிமிடங்​கள்), தாமஸ் மியூனியர் (24-வது நிமிடம்) லியாண்ட்ரோ ட்ரா​சார்ட் (90-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர். வேல்ஸ் அணி சார்​பில் ஜோ ரோடன் (8-வது நிமிடம்), நேதன் பிராட்​ஹெட் (89-வது நிமிடம்) ஆகியோர்​ தலா ஒரு கோல்​ அடித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here