இந்திய விமானப்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாயு சக்தி என்ற பெயரில் பிரம்மாண்ட போர் பயிற்சியை பொக்ரானில் நிகழ்த்துவது வழக்கம். இந்தாண்டு வாயு சக்தி போர் பயிற்சி வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, விமானப்படை வெற்றிகரமாக பங்காற்றியது குறித்து இந்த பயிற்சியின்போது விளக்கப்படும். இந்த போர் பயிற்சி பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் நடைபெற்றாலும், இது வழக்கமாக மேற்கொள்ளப்படும் பயிற்சிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



