சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடுத்த மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்த இபிஎஸ்

0
47

அ​தி​முக வாக்​குச்​சாவடி கிளை நிர்​வாகி​களை தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்த மாவட்​ட​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2026 சட்​டப் பேரவை தேர்​தலில், அதி​முக அனைத்து தொகு​தி​களி​லும் வெற்றி பெறும்​வகை​யில், சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட ஒன்றிய, நகர, பேரூ​ராட்சி மற்​றும் மாநக​ராட்​சிப் பகு​தி​களில், வாக்​குச்​சாவடி (பாகம்) கிளை​கள் முழு​மை​யாக அமைக்கப்பட்டுள்ளன.

இதன் நிர்​வாகி​கள் அனை​வரை​யும் ஆன்​லைனில் ஒருங்​கிணைத்​து, அவர்​களுக்கு தக்க பயிற்சி அளிக்க வேண்​டும். தேர்​தல் பணி​களில் அவர்​களை முழு​மை​யாக ஈடு​படச் செய்ய வேண்​டும். ஒவ்​வொரு வாக்​குச்​சாவடிக்​கும் உட்​பட்ட இடங்​களில் வசித்து வரும் மக்​களிடையே வீடு​தோறும் சென்​று, திமுக​வின் பொய் வாக்​குறு​தி​கள் மற்​றும் திமுக ஆட்​சி​யின் அலங்​கோலங்​களை எடுத்​துக்​கூற வேண்​டும். மக்​கள் நலன் கருதி அதி​முக ஆட்​சிக் காலங்​களில் நிறைவேற்​றப்​பட்ட முத்​தான திட்​டங்​களை விளக்​க​மாக எடுத்​துக் கூற வேண்​டும்.

பணி​களை முறைப்​படுத்தி செயல்​படுத்​து​வதற்​காக, கட்​சி ரீ​தியி​லான ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தலா 3 பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இப்​பொறுப்​பாளர்​கள் அனை​வரும், அவர​வர் மாவட்​டங்​களுக்கு சென்​று, தங்​கள் பணி​களை மேற்​கொள்ள வேண்​டும். தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள பொறுப்​பாளர்​களுக்​கு, சம்​பந்​தப்​பட்ட மாவட்ட செய​லா​ளர்​கள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும்.

`எனக்​குப் பின்​னாலும், இன்​னும் எத்​தனை நூற்​றாண்​டு​கள் வந்​தா​லும் அதி​முக மக்​களுக்​காகவே இயங்​கும்’ என்று சூளுரைத்த, முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் எண்ண ஓட்​டத்தை மெய்ப்​பிக்​கும் வகை​யில், தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள மாவட்​டப் பொறுப்​பாளர்​களுக்​கு, சம்​பந்​தப்​பட்ட மாவட்​டச் செய​லா​ளர்​கள், பாக நிர்​வாகி​கள், பல்​வேறு நிலைகளில் பணி​யாற்றி வரும் நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் முழு ஒத்​துழைப்பு நல்கி களப்​பணி ஆற்​றிடு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here