அமலாக்கத் துறை விசாரணை தடை நீட்டிப்பு: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
13

டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் அமலாக்​கத் துறை விசா​ரணை தடையை நீட்டித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்ளது. தமிழகத்​தில் ‘டாஸ்​மாக்’ தலைமை அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தீவிர சோதனை நடத்​தினர்.

இந்த சோதனை சட்​ட​விரோதம் என்று அறிவிக்க கோரி​யும், விசா​ரணை என்ற பெயரில் அதி​காரி​களை துன்​புறுத்த கூடாது என்று உத்​தர​விட கோரி​யும் டாஸ்​மாக் நிர்​வாகம் மற்​றும் தமிழக அரசு சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.க​வாய் தலை​மையி​லான அமர்​வு, அந்த மேல்​முறை​யீட்டு மனுவை கடந்த மே 22-ம் தேதி விசா​ரித்​தது. அப்போது, அமலாக்கத் துறை விசா​ரணைக்கு இடைக்​கால தடை விதித்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு விசா​ரணை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிபதி கே.​வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று மீண்​டும் நடந்​தது. தமிழ்​நாடு அரசு சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் வாதாடிய​தாவது: அரசு நிறு​வனத்​தில் அமலாக்​கத் துறை எப்​படி சோதனை நடத்த முடி​யும்? டாஸ்​மாக் இயக்​குநர் வீட்​டில் சோதனை நடத்​தி​யுள்​ளது. டாஸ்​மாக் முறை​கேடு புகார்​கள் தொடர்​பாக தமிழ்​நாடு அரசே வழக்​குப் பதிவு விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்​கு​களை எப்​படி விசா​ரிக்க வேண்​டும் என்​பதை தமிழ்​நாடு அரசு​தான் முடிவு செய்​யும். முறை​கேடு வழக்​குப் பதிவு செய்​தால், உடனே அமலாக்​கத் துறை​யும் பண மோசடி வழக்​கைப் பதிவு செய்​கிறது. கடந்த 2014 – 21 கால கட்​டத்​தில் டாஸ்​மாக் விற்​பனை கடைகளுக்கு எதி​ராக மாநில லஞ்ச ஒழிப்​புத் துறை 47 வழக்​கு​களை பதிவு செய்​துள்​ளது.

ஆனால், 2025-ல் அமலாக்​கத் துறை உள்ளே நுழைந்து டாஸ்​மாக் தலைமை அலு​வல​கத்​தில் சோதனை நடத்​தி, ஆவணங்​களை எடுத்​துச் சென்​றுள்​ளது. அமலாக்​கத் துறை பதிவு செய்​துள்ள வழக்கு விவரத்தை மாநில அரசிடம் சட்​டப்​படி பகிர்ந்து கொள்ள வேண்​டும். ஆனால், எந்த விவரத்​தை​யும் அமலாக்​கத் துறை பகிர​வில்​லை. இவ்​வாறு அவர் வாதிட்​டார்.

அமலாக்​கத் துறை சார்​பில் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் எஸ்​.​வி.​ராஜு ஆஜராகி, இந்த விவ​காரத்​தில் பண மோசடியை அமலாக்​கத் துறை விசா​ரித்து வரு​கிறது. டாஸ்​மாக்​கில் பெரு​மள​வில் முறை​கேடு​கள் நடை​பெற்​றுள்​ளது. இது தொடர்​பாக பதிவு செய்​யப்​பட்ட பெரும்​பாலான வழக்​கு​கள் கைவிடப்​பட்​டுள்​ளன’’ என வாதிட்​டார்.

டாஸ்​மாக் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் முகுல் ரோத்​தகி வாதிடும் போது, ‘‘டாஸ்​மாக் தலை​மையகத்​தில் நடத்​தப்​பட்ட சோதனை​யின் போது அதி​காரி​களின் செல்​போன்​களை அமலாக்​கத் துறை எடுத்து சென்று தரவு​களை நகலெடுத்​துள்​ளது. இது வாழும் உரிமை, தனி மனித சுதந்​திரம் போன்ற அடிப்​படை உரிமைக்கு எதி​ரானது’’ என வாதிட்​டார்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் பதிவு செய்து கொண்ட நீதிப​தி​கள், அமலாக்​கத் துறை அதி​காரத்தை உறுதி செய்த விஜய் மதன்​லால் தொடர்​பான வழக்​கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனு வி​சா​ரணை​யில் உள்​ளது. அந்த மேல்​முறை​யீடு மனுக்​கள் வி​சா​ரணை எடுத்​துக் கொள்​ளப்​படும். அது​வரை, அமலாக்​கத் துறை வி​சா​ரணைக்​கு வி​தித்​த இடைக்​கால தடையை உறு​தி செய்​து வி​சா​ரணை​யை நிறுத்​தி வைக்​கிறோம்​. இவ்​வாறு நீதிபதிகள்​ உத்​தரவிட்​டனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here