திருப்போரூர் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து மறியல்

0
47

நீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி திருப்போரூர் முரு​கன் கோயிலுக்கு சொந்​த​மான நிலத்​தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்​கொண்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்து விவ​சா​யிகள், பொது​மக்​கள் மற்​றும் அரசி​யல் கடசி​யினர் மறியல் மற்​றும் போராட்​டங்​களில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

திருப்போரூர் கந்​த​சாமி கோயிலுக்கு சொந்​த​மான நிலங்​கள் தனி நபர்​கள் இடத்​தில் இருப்​ப​தாக​வும், அவற்றை மீட்டு கோயில் நிர்​வாகத்​தின் கீழ் கொண்டு வர வேண்​டும் என்​றும் கூறி, சென்​னையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஜெகன்​னாத் என்​பவர் கடந்த 2020-ம் ஆண்​டு, சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார்.

பல வருடங்​களாக இவ்​வழக்கு நடை​பெற்று வந்த நிலை​யில், நிலங்​களை தனி நபர்​களிட ​மிருந்து மீட்க வேண்​டும் என்று உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஆனால், பல்​வேறு காரணங்​களாலும், பொது​மக்​கள் எதிர்ப்​பாலும் இப்​பணி தாமத​மானது.

இதையடுத்​து, நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த உயர்​நீ​தி​மன்​றம் 21 நாட்​களுக்​குள் கோயில் நிலங்​களை மீட்டு சுவாதீனம் எடுக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டது.

இதைத் தொடர்ந்​து, அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் குமாரதுரை, உதவி ஆணை​யர்​கள், அறநிலை​யத்​துறை செயல் அலு​வலர் குமர​வேல் ஆகியோர் அடங்​கிய குழு​வினரும், வரு​வாய்த்​துறை கூடு​தல் வட்​டாட்​சி​யர் பார்​வதி மற்​றும் வரு​வாய் ஆய்​வாளர்​கள், கிராம நிர்​வாக அலு​வலர்​கள் அடங்​கிய குழு​வினரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.

பொக்​லைன் இயந்​திரம் மூலம் கோயில் நிர்​வாகத்​தின் பெயர் பலகையை வைக்க முற்​பட்​ட​போது விவ​சாய நிலங்​களை குத்​தகைக்கு எடுத்​திருந்​தவர்​கள், நிலங்​களை அனுப​வித்து வருபவர்​கள், பொது​மக்​கள், விவ​சா​யிகள், அரசி​யல் கட்​சி​யினர், தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தினர் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினர் திரண்டு வந்து தடுத்து நிறுத்​தினர்.

இந்த விவ​சாய நிலங்​கள் யாருக்​கு சொந்​தம் என்று கேட்டு நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்து இருப்​ப​தாக​வும், வழக்​கின் தீர்ப்பு வரும் வரை ஆக்கிரமிப்பு அகற்​றும் முடிவை கைவிட வேண்​டும் என்​றும் கோஷமிட்​டனர்.

இதனிடையே சிலர், விவ​சாய நிலங்​களில் நடப்​பட்ட கோயில் நிர்​வாகத்​தின் பெயர் பலகைகளை அடித்து உடைத்​து, பேனர்​களை கிழித்து எறிந்​தனர். மேலும், ஏராள​மான ஆண்​களும், பெண்​களும் நெம்​மேலி சாலை​யில் அமர்ந்து மறியலில் ஈடு​பட்​டனர்.

இதைத் தொடர்ந்​து, அதி​காரி​கள் முன்​னிலை​யில் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில் பொது மக்​களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்​கு​வது என்​றும், அதற்​குள் முடிவு ஏற்​பட​வில்லை எனில் ஆக்கிரமிப்புகள் அகற்​றப்​படும் என கோயில் நிர்​வாகத்​தினர் தெரி​வித்​தனர். இதை இரு தரப்​பும் ஏற்​று அதற்​கான ஆவணங்​களில்​ கையெழுத்​திட்​டு கலைந்​து சென்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here