வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பொதுநலனுக்காக பயன்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

0
19

குளோபல் பின்​டெக் விழா​ மும்​பை​யில் நேற்று தொடங்​கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய​தாவது: உலகளா​விய நிதி தொழில்​நுட்ப தலைநக​ராக இந்​தியா சிறந்து விளங்​கு​கிறது. நிதி தொழில்​நுட்​பத்​தில் புது​மை, அளவு மற்​றும் உள்​ளடக்​கத்​தில் புதிய அளவு​கோல்​களை இந்​தியா நிர்​ண​யித்​துள்​ளது.

தொழில்​நுட்​பம் என்​பது பொது நலனுக்​கான​தாக இருக்க வேண்​டும். எந்த நேரத்​தி​லும் அதனை மற்ற நாடு​களுக்கு எதி​ரான ஆயுத​மாக பயன்​படுத்​தக்​கூ​டாது. இவ்​வாறு நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​தார். குளோபல் பின்​டெக் விழா​வில் குஜ​ராத் சர்​வ​தேச நிதி தொழில்​நுட்ப நகர ஐஎப்​எஸ்​சி-ல் வெளி​நாட்டு நாணய தீர்வு முறையை நிதி​யமைச்​சர் தொடங்கி வைத்​தார்.

இது, நிகழ்​நேர அடிப்​படை​யில் தடையற்ற பரிவர்த்​தனை​களை எளி​தாக்​கும். பணப்​புழக்க மேலாண்​மையை மேம்​படுத்​தும். அத்​துடன் இணக்​கத்தை உறுதி செய்​யும். தற்​போது வெளி​நாட்டு நாணய பரிவர்த்​தனை​களுக்கு வழக்​க​மாக 36 முதல் 48 மணி நேரம் வரை தாமத​மாகிறது. இந்த நிலை​யில், இப்​பு​திய முறை வெளி​நாட்டு பணப் பரிவர்த்​தனைக்கு உடனடி தீர்​வு​களை வழங்​கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here