சென்னை புறநகர் பகுதிகளில் ஞாயிறு, பண்டிகை நாட்களையொட்டி வரும் தேசிய விடுமுறை நாட்களில், வழக்கமாக 30 சதவீதம் வரை ரயில் சேவைகள் குறைத்து இயக்கப்படும். அதன்படி ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி அடுத்தடுத்த நாட்களில் (அக்.1, 2) வருகின்றன.
எனவே இன்றும், நாளையும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரயில் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்.