கிரிக்​கெட்​டில் ஃபோர்​பீச்​சர் என்ற சட்​டம் குறித்து தெரியுமா?

0
13

கிரிக்​கெட்​டில் ஃபோர்​பீச்​சர் என்ற சட்​டம் ஒன்று உள்​ளது. ஏற்​கெனவே திட்​ட​மிடப்​பட்ட போட்​டியை விளை​யாட விருப்​பம் இல்​லை​யென்​றால் அந்த அணி​யின் கேப்​டன் அந்த போட்​டியை ஃபோர்​பிட் செய்ய முடி​யும். அதாவது ஒரு போட்​டி​யின் இன்​னிங்ஸை விளை​யா​டா​மல் விலக முடி​யும்.

ஆனால் ஒரு​நாள் போட்​டி, டி 20 போட்​டிகளில் இதை செய்​தால் அந்த போட்​டி​யில் இருந்து வில​கு​வதற்கு சமம். அதாவது அந்த ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​த​தாக அறிவிக்​கப்​பட்டு எதிரணி வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​படும். இது ஒரு உணர்ச்​சிப்​பூர்​வ​மான முடிவு. கிரிக்​கெட் வரலாற்​றில் இது அரி​தாகவே நிகழ்ந்​துள்​ளது. சரி​யான காரணம் இல்​லாமல் இந்த முடிவை எடுத்​தால் போட்​டியை ஏற்​பாடு செய்​யும் வாரி​யத்தை அவமதிப்​பது போன்று ஆகி​விடும். மேலும் சர்​வ​தேச அரங்​கில் அந்த அணி​யின் நன்​ம​திப்​புக்​கும் களங்​கம் ஏற்​படும்.

முதன் முறை​யாக ஃபோர்​பிட் நிகழ்வு 1978-ல் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் இடையே நடை​பெற்ற ஒரு​நாள் போட்​டி​யின் போது அரங்​கேறியது. இந்​திய அணி பேட்​டிங் செய்த போது ஒரே ஓவரில் பாகிஸ்​தான் அணி 4 பவுன்​ஸர்​களை வீசி​யது. ஆனால் அதற்கு களநடு​வர் வைடு கொடுக்​க​வில்​லை. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த இந்​திய அணி​யின் கேப்​டன் பிஷன் சிங் பேடி களத்​தில் இருந்த 2 பேட்​ஸ்​மேன்​களை​யும் வெளியே அழைத்து ஆட்​டத்தை ஃபோர்​பிட் செய்​தார்.

சர்​வ​தேச கிரிக்​கெட்​டில் போட்​டியை ஃபோர்​பிட் செய்த முதல் கேப்​டன் பிஷன் சிங் பேடி​தான். இதையடுத்து 1996-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் போது இலங்​கை​யில் குண்​டு​வெடிப்பு நிகழ்ந்​தது. இதனால் கொழும்பு நகரில் இலங்கைக்கு எதிராக நடை​பெற இருந்த ஆட்​டத்​தில் பங்​கேற்க ஆஸ்​திரேலி​யா, மே.இ. தீவு​கள் மறுத்​தன.

இந்த விவ​காரத்​தில் இரு அணி​களுக்​கும் ஐசிசி தண்​டனை அறி​வித்​தது. இதனால் இந்த இரு ஆட்​டங்​களும் ஃபோர்​பிட் செய்​யப்​பட்​ட​தாக அறி​வித்து இலங்கை அணிக்கு புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டன. டெஸ்ட் கிரிக்​கெட்​டில் 2006-ம் ஆண்டு இங்​கிலாந்து – பாகிஸ்​தான் அணி​கள் மோதிய டெஸ்ட் போட்​டி​யில் ஃபோர்​பிட் நிகழ்ந்​தது. 4-வது நாள் ஆட்​டத்​தின் போது நடு​வர்​கள் பந்தை ஆய்வு செய்த போது பாகிஸ்​தான் வீரர்​கள் வேண்​டுமென்றே பந்தை சேதப்​படுத்​தி​யது தெரிய​வந்​தது.

இதனால் வேறு பந்தை மாற்ற வேண்​டும் என நடு​வர்​கள் கூறினர். ஆனால் இதை பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் இன்​ச​மாம் உல் ஹக் ஏற்​றுக்​கொள்​ள​வில்​லை. நடு​வரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரி​வித்து சக அணி வீரர்​களை அழைத்​துக் கொண்டு இன்​ச​மாம் மைதானத்​தில் இருந்து உடனடி​யாக வெளி​யேறி​னார். இதன் பின்​னர் அவர்​கள், களத்​துக்கு திரும்​ப​வில்​லை. இதனால் இந்த போட்டி ஃபோர்​பிட் செய்​யப்​பட்​ட​தாக​வும் இங்​கிலாந்து அணி வெற்​றி​யாளர் எனவும் அறிவிக்​கப்​பட்​டது.

2000-ம் ஆண்டு செஞ்​சூரியன் நகரில் நடை​பெற்ற டெஸ்​டில் இங்​கிலாந்து – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் மோதின. தென் ஆப்​பிரிக்கா முதல் இன்​னிங்​ஸில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 248 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை கார​ணமாக ஆட்​டம் தடைபட்​டது. தொடர் மழை காரண​மாக அடுத்த 3 நாட்​களும் ஆட்​டம் நடை​பெற​வில்​லை.

இதனால் தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் ஹன்சி குரோனி, இங்​கிலாந்து கேப்​டன் நாசர் ஹுசைனிடம் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது எப்​படி​யும் போட்டி டிரா​வில்​தான் முடிவடைய போகிறது. ஆனால் நாம் நினைத்​தால் இந்த ஆட்​டத்​தில் இரு அணி​களும் தலா ஒரு இன்​னிங்ஸை ஃபோர்​பிட் செய்​தால் முடிவை எட்​டலாம் என யோசனை கூறி​னார். தொடர்ந்து தென் ஆப்​பிரிக்க அணி முதல் இன்​னிங்ஸை 248 ரன்​களு​டன் டிக்​ளேர் செய்​தது.

அப்​போது இருந்த விதி​முறை​களின்​படி பேட்​டிங் செய்​யாமல் ஃபோர்​பிட் செய்ய முடி​யாது. இதனால் இங்​கிலாந்து அணி முதல் இன்​னிங்ஸை 0/0 என்ற நிலை​யில் டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து தென் ஆப்​பிரிக்க அணி 2-வது இன்​னிங்ஸை ஃபோர்​பிட் செய்​தது. இதையடுத்து 249 ரன்​கள் இலக்​குடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இங்​கிலாந்து அணி 75.1 ஓவர்​களில்​ 8 விக்​கெட்​கள்​ இழப்​புக்​கு 251 ரன்​கள்​ எடுத்​து வெற்​றி பெற்​றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here