சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

0
16

‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம் நாடு முழு​வதும் நேற்று நடந்​தது. தமிழக பாஜக சார்​பில் சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் அரு​கில் நடை​பெற்ற விழாவுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தலைமை வகித்​தார்.

மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன், செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்பட பாஜக நிர்​வாகி​கள் பலர் கலந்து கொண்​டனர். இந்​நிகழ்ச்​சி​யில், பிரதமர் மோடி​யின் ‘சுய​சார்பு இந்​தி​யா’வை வலி​யுறுத்​தும் வித​மாக சுதேசி உறு​தி​மொழியை ஏற்​றுக்​ கொண்​டனர். பின்​னர், அனை​வரும் வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தொடர்ந்​து, பொது​மக்​களுக்கு தமிழிசை சவுந்​தர​ராஜன் இனிப்பு வழங்​கி​னார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுதேசி உறு​தி​மொழியை எடுத்​ததன் மூலம், அந்​நிய பொருட்​களை தவிர்த்​து, சுதேசி பொருட்​களைப் பயன்​படுத்த போகிறோம்.

மேலும், சுதேசி செயலியை பயன்​படுத்த போகிறோம். அதாவது, அனை​வரும் பயன்​படுத்​தும், வாட்​ஸ்​அப் இப்​போது ‘அரட்​டை’​ யாக மாறிக் கொண்​டிருக்​கிறது. ‘விதேசி’களை விடுத்து ‘சுதேசி’ களை ஆதரிக்​கும் இயக்​கங்​களாக அனைத்து இயக்​கங்​களும் மாற வேண்​டும். அது​தான் பிரதமரின் நோக்​கம். நேரு, மன்​மோகன் சிங், நரசிம்​ம​ராவ் காலத்​தி​லும் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தம் நடத்​தப்​பட்டுள்ளது. ஆனால், மோடி காலத்​தில் நடத்​தி​னால் மட்​டும், போராட்​டம் நடத்த போகிறோம் என இண்​டியா கூட்​ட​ணி​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

2 ஆண்​டு​களாக கஷ்டப்​பட்டு சேர்த்த பொய் வாக்​காளர்​கள் அனை​வரும் போய் விடு​வார்​கள் என்ற கவலை திமுக​வுக்கு ஏற்​பட்டு விட்​ட​தா?ஜனநாயகத்தை காக்க எதை வேண்​டு​மா​னாலும் செய்ய வேண்​டும் என சொல்​லும் ஸ்டா​லின், முதலில் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தத்தை ஒப்​புக்​கொள்ள வேண்​டும். கோவை முழு​வதும் ஓலக்​குரல் ஒலித்து கொண்​டிருக்​கிறது. திமுகவை சார்ந்​தவர்​களால்​தான் திமுக அழியப்​போகிறது. இல்​லை​யென்​றால், மக்​களால் திமுக அழி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here