பத்மனாபபுரத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்

0
258

பத்மனாபபுரம் கோட்டாட்சியர் தமிழரசி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது: பத்மனாபபுரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் பத்மனாபபுரம் ஆர்டிஒ அலுவலக கூட்டரங்கில், ஆகஸ்ட் 28ம் தேதி (இன்று) புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆர்டிஓ தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் தாலுகாவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here