நன்கொடை தராததால் நற்பெயரைக் கெடுத்தாரா? – மதிமுக மாவட்டச் செயலாளர் – காங்கிரஸ் எம்எல்ஏ மல்லுக்கட்டு!

0
8

2026 தேர்தலில் திமுக-வுக்கும் தங்களுக்கும் தான் போட்டி என்கிறார் தவெக தலைவர் விஜய். ஆனால் தென்காசி மாவட்டத்தில், ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் காங்கிரஸும் மதிமுக-வும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தென்​காசி தெற்கு மாவட்ட மதிமுக செய​லா​ள​ராக இருப்​பவர் ராம.உதயசூரியன். அண்​மை​யில் இவர் தனது முகநூலில் பதி​விட்ட பதிவு ஒன்று, ஆளும் கூட்​ட​ணிக்​குள் அதிர்​வு​களை உண்​டாக்கி இருக்​கிறது. ‘ரா​மநதி – ஜம்​புநதி கால்​வாய் திட்​டத்​துக்கு திமுக அரசு ஒதுக்​கிய ரூ.21 கோடி​யில் கமிஷன் கிடைக்​காத விரக்​தி​யில் சட்​டமன்ற உறுப்​பினர்’ என்​பது​தான் உதயசூரியன் போட்ட அந்த முகநூல் பதிவு.

தென்​காசி மாவட்ட காங்​கிரஸ் தலை​வ​ரான எஸ்​.பழனி நாடார் தான் இப்​போது தென்​காசி எம்​எல்​ஏ-​வாக இருக்​கி​றார். பெயர் குறிப்​பி​டா​விட்​டாலும் பழனி நாடாரைத்​தான் உதயசூரியன் முகநூலில் உரசி இருக்​கி​றார் என்று கோபப்​படும் மாவட்ட காங்​கிரஸ் பிர​முகர்​கள், உதயசூரிய​னுக்கு பதிலடி​யும் கொடுத்து வரு​கின்​ற​னர்.

திருச்சி மதி​முக மாநாட்​டுக்​காக பழனி நாடாரிடம் உதயசூரியன் ரூ.1 லட்​சம் நன்​கொடை கேட்​ட​தாக​வும், அவர் தரமறுத்​த​தால் இப்​படி அவதூறு பரப்​புவ​தாக​வும் கொந்​தளிக்​கி​றார்​கள் கதர் பார்ட்​டிகள். அதே​போல், மாவட்​டச் செய​லா​ளர் உள்​ளிட்ட மதி​முக நிர்​வாகி​களை பழனி நாடார் அவம​தித்​து​விட்​ட​தாகச் சொல்லி மதி​முக-​வினரும் கண்​டனக் குரல் எழுப்பி வரு​கி​றார்​கள்.

அண்​மை​யில் சுரண்டை நகரில் பழனி நாடார் ஏற்​பாடு செய்த காங்​கிரஸ் கூட்​டத்​தில் திருச்சி வேலுச்​சாமி திமுக-வை விமர்​சித்​துப் பேசி​னார். இது திமுக-​வினர் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்​படுத்தி இருந்த நிலை​யில், இப்​போது மதி​முக – காங்​கிரஸ் சொற்​போரும் ஆளும் கூட்​ட​ணிக்​குள் சலசலப்பை உண்​டாக்கி இருக்​கிறது.

இது தொடர்​பாக நாம் ராம.உதயசூரிய​னிடம் பேசி​ய​போது, “ஆவுடை​யானூர்- பாவூர்​சத்​திரம் சந்தை சாலை அமைக்​கும் பணிக்கு அண்​மை​யில் பூமி பூஜை நடந்​தது. அந்த நிகழ்ச்​சிக்கு வந்த எம்​எல்​ஏ-​வான பழனி நாடாரிடம் எங்​கள் பகுதி இளைஞர் ஒரு​வர் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். அவரை நான் கண்​டித்​தேன். அதனால் அந்த நபர் என் மீது இப்​போது வரைக்​கும் அவதூறு பரப்பி வரு​கி​றார். முன்பு ஏதோ ஒரு உதவி கேட்​டுப் போன அந்த இளைஞரை எம்​எல்ஏ தரப்​பில் உதாசீனப்​படுத்தி இருக்​கி​றார்​கள். அந்த ஆத்​திரத்​தில் தான் அன்​றைக்கு அவர் எம்​எல்​ஏ-​விடம் வாக்​கு​வாதம் செய்​திருக்​கி​றார்.

இந்​நிலை​யில், திருச்சி மாநாட்​டுக்​காக கூட்​டணி கட்சி எம்​எல்ஏ என்ற அடிப்​படை​யில் கட்சி நிர்​வாகி​களு​டன் சென்று பழனி நாடாரைச் சந்​தித்து நன்​கொடை கேட்​டோம். அப்​போது, ஆவுடை​யானூர் சம்​பவத்​தில் இளைஞரை தூண்​டி​விட்டு தன்னை அவமானப்​படுத்​தி​ய​தாகக் கூறி என்​னிடம் ஒரு​மை​யில் பேசி, வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார் எம்​எல்ஏ. எவ்​வளவோ எடுத்​துச் சொல்​லி​யும் அவர் சமா​தான​மாக​வில்​லை.

நீண்ட நாட்​களாக கிடப்​பில் இருந்த ராமநதி – ஜம்​புநதி கால்​வாய் திட்​டம் மீண்​டும் உயிர்​பெற்று பணி​கள் தொடங்​கப் போவதைக் கேள்​விப்​பட்டு நானே தான் அன்​றைய பூமிபூஜை​யில் கலந்து கொண்​டேன். ஆனால், எம்​எல்​ஏ-​வாக இருக்​கும் தன்னை பூமி பூஜைக்கு அழைக்​காதது ஏன் என அதி​காரி​களை தவறாகப் பேசி இருக்​கி​றார் எம்​எல்ஏ. திட்​டப் பணி​கள் சரி​யாக நடக்​க​வில்லை என புகார்​களை​யும் அனுப்பி இருக்​கி​றார்.

இந்​தத் திட்​டத்​துக்கு அரசு கூடு​தலாக ரூ.21 கோடி நிதி ஒதுக்​கிய நிலை​யில், எம்​எல்​ஏ-​வின் எதிர்​பார்ப்பு ஏதோ நிறை​வேற​வில்லை போலிருக்​கிறது. அந்த விரக்​தி​யில் தான் என்​னிட​மும் திட்ட அதி​காரி​களிட​மும் அவர் அப்​படிப் பேசி இருக்​கி​றார். அதனால் தான் முகநூலில் எனது கருத்தை பதிவிட்டேன். ஆனால், ரூ.1 லட்​சம் நன்​கொடை தராத ஆத்​திரத்​தில் நான் விமர்​சனம் செய்​வ​தாக காங்​கிரஸார் சிலர் பழி சுமத்​துகின்​ற​னர்.

உண்​மை​யில் அங்கு என்ன நடந்​தது என்​பதை சிசி டிவி பதிவை வெளி​யிட்​டு, என் மீது தவறு இருந்​தால் தாராள​மாக புகாரளிக்​கலாம். தேர்​தலில் பழனி நாடார் வெற்​றிக்​காக கூட்​டணி கட்சி என்ற அடிப்​படை​யில் தீவிர பிரச்​சா​ரம் செய்​துள்​ளேன். அதையெல்​லாம் மறந்​து​விட்டு சக நிர்​வாகி​கள் மத்​தி​யில் என்னை ஒரு​மை​யில் பேசிய அவரது செயல் நாகரி​கமற்​றது” என்​றார்.

இதுகுறித்து பழனி நாடாரிடம் கேட்​டதற்​கு, “திருச்சி மதி​முக மாநாட்​டுக்கு நன்​கொடை வாங்​கு​வதற்​காக உதயசூரியன் உள்​ளிட்ட மதி​முக நிர்​வாகி​கள் என்னை வந்து சந்​தித்​தனர். ஆனால், நன்​கொடை தரமுடி​யாது என்று நான் கூறி​விட்​டேன்.

ஆவுடை​யானூரில் எம்​எல்ஏ தொகுதி மேம்​பாட்டு நிதியில் இருந்து அமைக்​கப்​படும் பேருந்து நிழற்​குடை காண்ட்​ராக்​டிலும், பள்​ளிக் கட்​டிடம் கட்​டும் காண்ட்​ராக்​டிலும் உதயசூரியன் கமிஷன் வாங்​கி​யுள்​ளார். கமிஷனும் வாங்​கி​விட்டு நன்​கொடை​யும் கேட்​பது ஏன் என்று கேட்​டுத்​தான் நன்​கொடை வழங்க மறுத்​தேன். அதனால் இரு​வ​ருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. அவர் கேட்ட நன்​கொடையைக் கொடுக்​காத​தால் என்​னைப் பற்றி தவறாக விமர்​சனம் செய்​கி​றார்” என்​றார்.

ஆக மொத்​தத்​துல, எல்​லாமே ‘கமிஷன்’ படுத்​தும் பாடு தானா அய்​யா​மாரே..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here