2-வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் சதம் விளாசல்

0
14

பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் தொடங்​கியது. டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. முதலில் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்​களில் 255 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

கே.எல்​.​ராகுல் 19, அபிமன்யு ஈஸ்​வரன் 0, சாய் சுதர்​சன் 17, தேவ்​தத் படிக்​கல் 5, கேப்​டன் ரிஷப் பந்த் 24, ஹர்ஷ் துபே 14, ஆகாஷ் தீப் 0, குல்​தீப் யாதவ் 20, முகமது சிராஜ் 15, பிரசித் கிருஷ்ணா 0 ரன்​களில் நடையை கட்​டினர். தனி​நப​ராக போராடி சதம் அடித்த துருவ் ஜூரெல் 175 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 132 ரன்​கள் சேர்த்து கடைசி வரை ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி சார்​பில் இடதுகை மிதவேகப்​பந்து வீச்​சாள​ரான தியான் வான் வூரன் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். ஷெபோ மோரேகி, பிரெனலன் சுப்​ராயன் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 2-வது நாளான இன்று பேட்​டிங்கை தொடங்​கு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here