டெல்லியில் செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க கான்பூர் ஐஐடியுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் செயற்கை மழையைப் பெய்விக்க விமானம் புறப்பட்டது. ஆனால் போதுமான ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஐடி கான்பூர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “6 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம் மூலம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து மழை பெய்விக்க முயன்றது. மேகங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் எதிர்பார்த்த வெற்றி இல்லை. இந்தத் திட்டம் தற்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














