டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மோதல் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்றபோது காயமடைந்த கரண் என்ற 21 வயது இளைஞர் ஏற்கெனவே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால், அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கரணிடம் சிலர் பீடி பற்றவைக்கத் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அதை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் கரணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.



