பிஎட். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தகுதி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த அக்.27 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கே.ராஜசேகரன் அனுப்பிய சுற்றறிக்கை: 2025-26-ம் கல்வி ஆண்டில் பிஎட். மற்றும் பிஎட். (சிறப்புக் கல்வி) படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் தகுதி கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் அக்.27-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
இதற்குமேல் காலநீட்டிப்பு வழங்கப்படாது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.