மதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

0
11

மதுரை ஆதீனத்​துக்கு எதி​ரான வழக்​கில் நிலை அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, இந்த வழக்கை போலீ​ஸார் அரசி​யல் கண்​ணோட்​டத்​துடன் அணுகி​யுள்​ள​தாக கருத்து தெரி​வித்​துள்​ளார்.

சென்னை அருகே காட்​டாங்​குளத்​தூரில் கடந்த மே மாதம் நடை​பெற்ற சைவ சித்​தாந்த மாநாட்​டில் பங்​கேற்க வந்த மதுரை ஆதீனத்​தின் கார் மீது உளுந்​தூர்​பேட்டை அருகே மற்​றொரு கார் மோதி​யது. அதையடுத்து தன்னை கொலை செய்ய சதி நடந்​துள்​ள​தாக​வும், இதில் பாகிஸ்​தானுக்கு தொடர்பு இருப்​ப​தாக சந்​தேகம் உள்​ள​தாக​வும் மதுரை ஆதீனம் சர்ச்​சைக்​குரிய வகை​யில் கருத்து தெரி​வித்​திருந்​தார்.

அதையடுத்து மத ஒற்றுமையை சீர்​குலைக்​கும் நோக்​கில் பேசி​யுள்​ள​தாக மதுரை ஆதீனம் மீது சென்னை சைபர் கி்ரைம் போலீ​ஸார் 4 பிரிவு​களின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இந்த வழக்​கில் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் கடந்த ஜூலை மாதம் முன்​ஜாமீன் வழங்​கியது.

தன் மீது பதி​யப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக்​கோரி மதுரை ஆதீனம், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், விசா​ரணை என்ற பெயரில் அவருக்கு எதி​ராக கடும் நடவடிக்​கைகளை எடுக்​கக்​கூ​டாது என போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி என்​.சதீஷ்கு​மார் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது போலீ​ஸார் தரப்​பில், “மதுரை ஆதீனம் மத ஒற்​றுமையை சீர்​குலைத்து சட்​டம் – ஒழுங்கு பாதிக்​கப்​படும் வகை​யில் பேசி​ய​தால்​தான் அவர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. போலீ​ஸாரின் விசா​ரணைக்கு அவர் ஒத்​துழைப்பு அளிப்​ப​தில்​லை. முன்​னுக்​குப்​பின் முரணாக பதிலளிக்​கிறார்” என தெரிவிக்​கப்​பட்​டது.

ஆதீனம் தரப்​பி்ல், காவல்​துறை​யினரின் விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு அளித்து வரு​வ​தாக​வும், சிலர் சீருடை​யில்​லாமல் வந்து விசா​ரணை என்ற பெயரில் தொந்​தரவு செய்​வ​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, “இந்த விவ​காரத்தை அப்​படியே கண்​டு​கொள்​ளாமல் விட்டு இருந்​தால் அப்​போதே முடிந்து போய் இருக்​கும். நாட்​டில் எத்​தனையோ பிரச்​சினை​கள் உள்ளன. இந்த விவ​காரத்​தில் போலீ​ஸார் அரசி​யல் கண்​ணோட்​டத்​துடன் வழக்கு பதிவு செய்து பெரிதுபடுத்​தி​யுள்​ளனர்” என கருத்து தெரி​வித்​தார்.

பின்​னர், இந்த வழக்​கின் விசா​ரணை குறித்த நிலை அறிக்​கையை போலீ​ஸார் தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்​டு, விசா​ரணையை அக்​.27-க்கு தள்ளி வைத்​துள்​ளார். அது​வரை மதுரை ஆதீனத்​துக்கு எதி​ராக கடும் நடவடிக்​கைகள் எடுக்​கக்​கூ​டாது என்ற இடைக்​கால உத்​தர​வை​யும் நீ்ட்​டித்து உத்​தர​விட்​டுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here