டிசம்பர் 27-ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

0
11

காங்​கிரஸ் கட்​சி​யில் முக்​கிய முடிவு​கள் எடுக்​கும் உயர் அதி​கார அமைப்​பான செயற்​குழு​வின் கூட்​டம் டிசம்​பர் 27-ம் தேதி நடை​பெற உள்​ளது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்​டு​வரும் அரசின் நடவடிக்கை மற்​றும் தற்போதைய அரசி​யல் சூழ்​நிலை குறித்து இக்​கூட்​டத்​தில் விவாதிக்​கப்பட உள்​ள​தாக காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரிவித்தன.

பிஹார் தேர்​தலில் காங்​கிரஸ் தோல்விக்கு பிறகு நடை​பெறும் கட்சி​யின் முதல் செயற்​குழு கூட்​டம் இது​வாகும். மேலும் தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்​கம் ஆகிய மாநிலங்கள் 2026-ல் தேர்​தலை எதிர்​கொள்​ள​விருக்​கும் நிலையில் இக்​கூட்​டத்​தில் இதற்​கான வியூ​கம் வகுக்​கப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

புதிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தின் மூலம் மக்​களிடம் இருந்து வேலைக்கான உரிமையை அரசு பறிப்​ப​தாக​வும் இதற்கு எதி​ராக நாடு தழு​விய இயக்​கம் நடை​பெறும் என்​றும் காங்​கிரஸ் தேசிய தலை​வர் கார்கே கூறி​யிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here