மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல்

0
20

 தமிழகத்​தில் ஏப்​.23-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் பொது பார்​வை​யாளர்​கள் 136 பேர், செல​வின பார்​வை​யாளர்​கள் 150 பேர், காவல் பார்​வை​யாளர்​கள் 40 பேர் என 326 பார்​வை​யாளர்​கள் மற்​றும் சிறப்பு செல​வின பார்​வை​யாளர் ஆகியோர் தேர்​தல் ஆணை​யத்​தால் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழகம் முழு​வதும் பணி​யமர்த்​தப்​பட்​டுள்ள மத்​தி​யப் பார்​வை​யாளர்​களுக்​கான (பொது, காவல் மற்​றும் செல​வினப் பார்​வை​யாளர்​கள்) ஆய்​வுக் கூட்​டம் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தேர்​தல் ஆணை​யர்​கள் எஸ்​.எஸ்​.​சாந்து மற்​றும் விவேக் ஜோஷி ஆகியோர் பங்​கேற்​றனர்​. தமிழக தலை​மைத் தேர்தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் மற்​றும் மத்​திய பார்​வை​யாளர்​கள் 327 பேர் காணொலி காட்சி வாயி​லாக கலந்து கொண்​டனர்.

இக்​கூட்​டத்​தில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் அறி​வுறுத்​தி​ய​தாவது: எவ்​வித வன்​முறை​யுமின்​றி, திரு​விழா மனநிலை​யோடு சுதந்​திர​மாக​வும், நேர்​மை​யாக​வும் தேர்​தல் நடத்​தப்​படு​வதை மத்​திய பார்​வை​யாளர்​கள் உறுதி செய்ய வேண்​டும்.

தேர்​தல் நடத்தை விதி​களை தீவிர​மாக அமல்​படுத்த வேண்​டும். விதி​மீறல்​கள் குறித்த புகார்​கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

முறையான பயிற்சி

பார்​வை​யாளர்​கள் தங்​களது தொடர்பு எண்​களை​யும், பொது​மக்​கள், அரசி​யல் கட்​சிகள், வேட்​பாளர்​கள் அல்​லது அவர்​களது முகவர்​களிட​மிருந்து புகார்​களை பெறு​வதற்​கான இடம் மற்​றும் நேரத்​தை​யும் நன்கு விளம்​பரப்​படுத்த வேண்​டும். வாக்​குச்​சாவடி தலைமை அலு​வலர்​களுக்​கான பயிற்​சிகள் முறை​யாக வழங்​கப்​பட்​டுள்​ளதா என்​பதை மேற்​பார்​வை​யிட வேண்​டும்.

இணை​ய​வழி ஒளிபரப்பு

வாக்​குச்​சாவடிகளில் கைபேசியை பாது​காப்​பாக வைக்​கும் வசதி மற்​றும் வரிசை​யில் காத்​திருக்​கும் வாக்​காளர்​கள் அமர்​வதற்​கான வசதி உள்​ளிட்ட குறைந்​த​பட்ச அடிப்​படை வசதி​கள் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

மாக, அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் போது​மான குடிநீர் மற்​றும் நிழல் வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளதை உறு​திப்​படுத்த வேண்​டும்.

இணை​ய​வழி ஒளிபரப்பு (Webcasting) கண்​காணிப்பு கட்​டுப்​பாட்டு அறை ஏற்​பாடு​கள் முறை​யாகச் சரி​பார்க்​கப்​பட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ அறிவுறுத்​தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here