ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது ரயில்வே வேலை வழங்க லாலு குடும்பத்தினர் லஞ்சமாக நிலம் பெற்றுக்கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதுவரை 2 குற்றப் பத்திரிகைகள், 2 துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.














