தென்னிந்தியாவில் 4 தலைநகர்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்

0
48

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற ஒரு கலந்​தாய்வு கூட்​டத்​தில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: மத்​திய அரசு தென்​னிந்​தி​யா​வில் உள்ள ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூரு ஆகிய 4 தலைநகரங்​களை இணைக்​கும் வகை​யில் புல்​லட் ரயில் திட்​டத்​துக்கு சர்வே செய்ய உத்​தரவு வழங்கி உள்​ளது.

இதன் மூலம் 5 கோடி மக்​கள் பயனடைவர் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கான முதற்​கட்ட ஆய்வுகள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கூறி​னார். இதன்​படி இந்த புல்​லட் ரயில் திட்​டம் அமல் படுத்​தப்​பட்​டால், சென்​னையி​லிருந்து பெங்​களூரு​வுக்கு வெறும் 2 மணி நேரத்​தில் சென்​றடைய​லாம்.

அதே​போல், ஹைத​ரா​பாத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்​கும் வெறும் 2 மணி நேரத்​தில் சென்​றடைய​லாம் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது மும்​பை-அகம​தா​பாத் இடையே​யான புல்​லட் ரயில் திட்​டப்​பணி​கள் விரை​வாக நடை​பெற்று வரு​கின்​றன.

இதனை 7,000 கி.மீ தூரத்​துக்கு விரி​வாக்​க​ம் செய்​ய​வும் மத்​திய அரசு தீர்​மானித்​துள்​ள​தாக பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். புல்​லட் ரயில் திட்​டங்​கள் டெல்லி – வாராணசி, மும்பை – ஹைத​ரா​பாத், சென்னை – மைசூரு உள்​ளிட்ட வழித்​தடங்​களி​லும் அமைக்க சாத்​தியக்​கூறுகள் உள்​ள​தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here