ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு

0
9

ராஜஸ்​தான் மாநிலம் புஷ்கரில் ஆண்​டு​தோறும் புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி நடை​பெறும். இங்கு பல்​வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்​றவை காட்​சிக்கு வைக்​கப்​படும். இந்​நிலை​யில் இந்த ஆண்டு புஷ்கர் கண்​காட்​சி​யில் ரூ.15 கோடி மதிப்​பிலான குதிரை இடம்​பெற்​றுள்​ளது. சண்​டிகரை சேர்ந்த கேரி கில் என்​பவருக்​குச் சொந்​த​மான இந்த இரண்​டரை வயது குதிரை​தான் கண்​காட்​சி​யில் இடம்​ பெற்​று மக்​களை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளது.

இதுகுறித்து குதிரை​யின் உரிமை​யாளர் கேரி கில் கூறிய​தாவது: மார்​வாரி இனத்​தைச் சேர்ந்​த​ இந்த குதிரைக்கு ஷாபாஸ் என்று பெயர் வைத்​துள்​ளோம். பல்​வேறு கண்​காட்​சி​யில் இடம்​பெற்​றுள்ள ஷாபாஸ், பல விருதுகளைப் பெற்​றுள்​ளது. இந்த குதிரையை வாங்க போட்டி போடு​கின்​றனர். இது​வரை ரூ.9 கோடி வரை கேட்டு விட்​டுச் சென்​றுள்​ளனர். இந்த குதிரை மூலம் இனப்​பெருக்​கம் செய்ய ரூ.2 லட்​சம் கட்​ட​ணம் பெறுகிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அதே​போல் ராஜஸ்​தானைச் சேர்ந்த அன்​மோல் என்ற எரு​மை​யின் விலை ரூ.23 கோடி என புஷ்கர் ஒட்​டகக் கண்​காட்​சி​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்​டும் இந்த அன்​மோல் எருது கண்​காட்​சிக்கு வந்​திருந்​தது. இதுகுறித்து எரு​மை​யின் உரிமை​யாளர் கூறும்​போது, “அன்​மோல் எரு​மைக்கு தினந்​தோறும் பாலில் நாட்டு நெய், உலர் பழங்​கள் ஆகிய​வற்றை கலந்து சிறப்பு உணவாகத் தரு​கிறோம். 1,500 கிலோ எடை கொண்ட அன்​மோல் எருமை இனப்​பெருக்​கம் மூலம் ஏராள​மான பணத்தை ஈட்டி வரு​கிறது” என்​றார்.

மேலும் ரூ.10 கோடி மதிப்​பிலான பாதல் என்ற குதிரை, ரூ.25 லட்​சம் மதிப்​பிலான ராணா என்ற எரு​மை​யும் கண்​காட்​சி​யில் கலந்​து​கொண்​டுள்​ளன. இதுகுறித்து ராஜஸ்​தான் மாநில கால்​நடை வளர்ச்​சித்​துறை இணை இயக்​குநர் டாக்​டர் சுனில் கியா கூறும்​போது, “கடந்த 23-ம் தேதி தொடங்​கிய இந்த கண்​காட்​சி, வரும் நவம்​பர் 7-ம் தேதி வரை நடை​பெறும். இது​வரை, 3,021 கால்​நடைகள் கண்​காட்​சிக்​காக பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here