ரொட்டியை திருப்ப வேண்டும்: லாலு கருத்து

0
11

பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்​னாள் முதல்​வரும் ராஷ்டி​ரிய ஜனதா தளம் தலை​வரு​மான லாலு பிர​சாத் யாதவ் நேற்று பாட்​னா​வில் உள்ள ஒரு வாக்​குச்​சாவடி​யில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் ஆகியோ​ருடன் சென்று வாக்​களித்​தார்.

இது தொடர்​பான புகைப்​படத்தை ‘எக்​ஸ்’ தளத்​தில் அவர் பகிர்ந்து கொண்​டுள்​ளார். இதில், “தவா​வில் உள்ள ரொட்​டியை புரட்​டிப்​போட வேண்​டும். இல்​லா​விடில் அது கரு​கி​விடும். 20 ஆண்​டு​கள் என்​பது (நி​திஷ் குமாரின் ஆட்​சி) மிக​வும் நீண்​டது. புதிய பிஹாரை உரு​வாக்க தற்​போது தேஜஸ்வி தலை​மை​யில் அரசு அமைவது அவசி​யம்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here