மக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக: எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்

0
16

எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தேவையற்ற வேலை​யைச் செய்​யும் பாஜக, பதற்​ற​மாகவே வைத்​திருக்க நினைப்​ப​தாக நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார்.

இது குறித்து நேற்று திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பெண்​களுக்கு எதி​ரான பாலியல் துன்​புறுத்​தல் என்​பது கோவை​யில் நடந்த இது ஒரு நிகழ்​வல்ல. பல நிகழ்​வு​கள் வெளியே தெரி​யாமல் உள்​ளது. தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. 6 வயது குழந்​தையை வன்​புணர்வு செய்து எரித்​துக் கொலை செய்​து​விட்டு சிறையி​லிருந்து வந்​தவன் பெற்ற தாயை கொலை செய்​கி​றான். அவனை நீதி​மன்​றம் தண்​டனையை நீக்கி விடுவிக்​கிறது. இதையெல்​லாம் பார்க்​கும்​போது இச்​சமூகம் வாழ வாய்ப்​பற்று கொடூர​மாகி​விட்​டதோ எனத் தோன்​றுகிறது.

கோவை​யில் சம்​பவம் நடை​பெற்ற பகு​தி​யில் நீண்ட நாட்​களாக அதி​க​மாக மது விற்​பனை நடை​பெற்று உள்​ளது. காவல்​துறை சுட்​டுப் பிடித்​தோம் என்​கி​றார்​கள். இதற்கு நாம் அனை​வ​ரும் தலை​குனிய வேண்​டும். ஒரு பாது​காப்​பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்​டிருக்​கி​றோமோ என்ற நடுக்​கம் ஏற்​படு​கிறது. கடும் சட்​டங்​கள் இருந்​தால் தான் இது போன்ற சம்​பவங்​களை தடுத்து நிறுத்த முடி​யும். பொள்​ளாச்​சி​யில், அண்ணா பல்​கலை​யில் என இது​போன்று பாலியல் வன்​புணர்​வு​கள் தொடர்ச்​சி​யாக நடக்​கிறது.

அதி​முக குறித்து நான் சொன்​னது விமர்​சனமல்ல உண்​மை​யைச் சொன்​னேன். அதி​முக-​வினர் பேசுவதையெல்​லாம் ஒரு பொது மனித​னாகப் பாருங்​கள். துரோகம், சமூக நீதி, சுயமரி​யாதை குறித்​தெல்​லாம் பேச இவர்​களில் யாருக்​காவது தகுதி இருக்​கிற​தா? நான்​தான் திரா​விடத்​தின் உண்​மை​யான வாரிசு என்று சொல்​லும் போது வெறி வருமா வரா​தா? அதனால்​தான் பேசினேன்.

ஆரி​யத்தை எதிர்க்க வந்​தது திரா​விடம் என்​கி​றார்​கள். தமி​ழர் என்று வைத்​தால் பிராமணர்​கள் ‘நானும் தமி​ழன்’ என்று உள்ளே வந்து விடு​வார்​கள் என்று பெரி​யார் தொட்​டு, வீரமணி வரை பேசி வரு​கின்​ற​னர். அதே கருத்தை தான் அதி​முக-​வினர் பேசுகி​றார்​கள். திரா​விடம் என்று இருக்​கும்​போது ஜெயலலி​தா​வின் தலை​மையை திரா​விடத் தலை​வர்​கள் எப்​படி ஏற்​றார்​கள்?

ஆரி​யத்​தின் முன்பு திரா​விடம் மண்​டி​யிட்​டது. மண்​டி​யிட்​டால் கூட பரவா​யில்லை குப்​புற​விழுந்து கும்​பிட்​டது. இதில் சுயமரி​யாதை பற்றி பேசுகிறீர்​கள். இது​தான் தன்​மான​மா… தமி​ழினத்​தின் தலை நிமிர்​வா… சுயமரி​யாதை இது​தா​னா? காளி​முத்​து, திரு​நாவுக்​கரசர் ஆகிய இரு​வரைத் தாண்டி யாரேனும் ஒரு​வர் ஜெயலலிதா முன்​பாக நிமிர்ந்து நின்று பேசி இருக்​கி​றார்​களா? திமுக-வுக்​கும் அதி​முக-வுக்​கும் சுயமரி​யாதை பற்றி பேச தகுதி இல்​லை.

எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் பாஜக தேவையற்ற வேலை​யைச் செய்​கிறது. மக்​களை பதற்​ற​மாகவே வைத்​திருக்​கப் பார்க்​கி​றார்​கள். அப்​போது​தான் செய்​கிற தவறு வெளியே தெரி​யாமல் இருக்​கும். ஆவணங்​கள் கொடுக்​க​வில்லை என்​றால் பெயர்​களை நீக்​கு​வோம் என தேர்​தல் ஆணை​யம் இப்​போது தெரிவிக்​கிறது.

இரண்டு மாதத்​தில் தேர்​தலை வைத்​துக் கொண்டு என்ன ஆவணங்​களை கொடுக்க முடி​யும்? பிஹார் போன்ற வட மாநிலங்​களில் இருந்து தமி​ழ​கம் வந்​தவர்​களுக்கு வாக்​குரிமை வழங்க இந்த வேலை​யைச் செய்​கி​றார்​கள். அப்​படி வழங்​கும் போது தமிழ்​நாடு மற்​றுமொரு பிஹா​ராக மாறி​விடும்… என்றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here