தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி: ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

0
14

உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது தீப உற்​சவம் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை உ.பி. அரசு சார்​பில் அயோத்​தி​யின் ராம் மனோகர் லோகியா அவத்
பல்​கலைக்கழகம் நடத்​துகிறது.

இதில், 29 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​முலம் கடந்த ஆண்​டின் (26 லட்​சம் அகல் விளக்​கு​கள்) சாதனை முறியடிக்​கப்பட உள்​ளது. இவ்​விளக்​கு​கள் சரயு நதி​யின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்​கள் மற்​றும் குடி​யிருப்​பு​களில் ஒளிர உள்​ளன. தீபாவளிக்கு தமிழகத்​தில் நரகாசுரன் காரண​மானதைப் போல், உ.பி.​யில் ராமர் போருக்​குப் பின் அயோத்தி திரும்​பியதன்
நினை​வாக தீபாவளி பண்​டிகை கொண்​டாடப்​படு​கிறது. மேலும் 1,100 டிரோன்​கள் வானில் தீபாவளிக்​காக பறக்​க​விடப்பட உள்​ளன. இவற்​றில் ராமாயணத்​தின் காட்​சிகள் ஒளிப்​படங்​களாக சித்​தரிக்​கப்பட உள்​ளன.

இதுகுறித்து மாநில சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் ஜெய்​வீர் சிங் கூறும்​போது, “அயோத்​தி​யின் வெறும் தீபாவளி திரு​நாள் விழா​வாக அன்றி ஆன்​மிகம், நம்​பிக்​கை, கலாச்​சா​ரம் உள்​ளிட்​ட​வற்​றின் மெகா விழா​வாக கொண்​டாடப்பட உள்​ளது. இந்த வருட​மும் தீபாவளிக்கு வரும் வெளி​நாட்​ட​வர்​கள் இடையே இது சர்​வ​தேச அளவில் இந்​தி​யா​வின் கலாச்​சா​ரத்தை வெளிப்​படுத்​தும். இதைக் காண வரும் லட்​சக்​கணக்​காக பொது​மக்​களுக்​காக அயோத்​தி​யில் சிறப்பு போக்​கு​வரத்​துடன் பாது​காப்​பு​களும் பலப்​படுத்த உள்​ளன” என்​றார்.

அயோத்​தி​யின் தீபாவளி நிகழ்ச்​சிக்​காக உ.பி. அரசு வழக்​கம் போல், தன்​னார்​வலர்​கள் உதவியைப் பெற முடிவு செய்​துள்​ளது. இப்​பணிக்கு வர விரும்​புபவர்​கள் மாநில அரசின் இணை​யதளத்​தில் சுய​விவரங்​களைப் பதிவு செய்​ய​லாம். இதில் தமிழ்​நாட்​டிலிருந்​தும் பலர் தன்​னார்​வலர்​களாகப் பணி​யாற்ற விருப்​பம் தெரி​வித்து பதிவு செய்​துள்​ளனர்.

ராமர் கோயி​லில் முஸ்​லிம் தம்​பதி: அயோத்​தி​யின் ராமர் கோயி​லில் இந்து அல்​லாத இதர மதத்​தினருக்​கும் அனு​மதி அளிக்​கப்​படு​கிறது. இவர்​கள் பூசைக்​கான கரு​வறை தவிர இதர இடங்​களைப் பார்​வை​யிடலாம். நேற்று முன்​தினம் மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் திறந்து வைத்த துறவி​களின் சிலைகள் நிகழ்ச்​சிக்​குப் பின் ஒரு முஸ்​லிம் தம்​ப​தி​யும் பங்​கேற்​றனர். அயோத்​தி​யின் அண்டை மாவட்​ட​மான அம்​பேத்​கர் நகரிலிருந்து ஷேர் அலி​யும் அவரது மனைவி சாய்ரா பானு​வும் வந்​திருந்​தனர். போலீஸ் பாது​காப்​புடன் இந்த முஸ்​லிம்​ தம்​பதி சு​மார்​ 20 நிமிடங்​கள்​ ​ராமர்​ கோயிலை சுற்​றிப்​ ​பார்​த்​தனர்​. இது மதநல்​லிணைக்​கத்​தை வெளிப்​படுத்​தும்​ நிகழ்​​வாகப்​ ​பா​ராட்​டப்​படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here