நிதி வசூலில் சுணக்கம் காரணமாக அயோத்தி பாபர் மசூதி பணிகள் 6 ஆண்டுகளாக தாமதம்

0
17

அயோத்​தி​யில் 6 ஆண்​டு​களாகி​யும் பாபர் மசூதி கட்​டு​மானப் பணி தொடங்​கப்​பட​வில்​லை. வடிவ​மைமைப்பு முடி​வா​காதது, நிதி வசூலில் சுணக்​கம் ஆகியவை இதற்கு காரண​மாக உள்​ளன.

உத்​தரபிரதேசம், அயோத்தி ராமர் கோயில் தொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்ற நிலை​யில் டிசம்​பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்​கப்​பட்​டது. பிறகு உச்ச நீதி​மன்ற மேல்​முறை​யீட்டு வழக்கு தீர்ப்பு நவ. 19, 2019-ல் வெளி​யானது.

இதில் பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட இடத்​தில் ராமர் கோயில் கட்ட அனு​மதி அளிக்​கப்​பட்​டது. பாபர் மசூதி கட்ட மாற்று இடம் வழங்க உத்​தர​விடப்​பட்​டது. இதன்​படி மசூ​திக்​காக அயோத்​தி​யில் இருந்து 20 கி.மீ தொலை​வில் உள்ள தனிபூர் கிராமத்​தில் உ.பி. அரசு 5 ஏக்​கர் நிலம் ஒதுக்​கியது.

மசூதி கட்​டும் பொறுப்​பு, உ.பி. மாநில சன்னி முஸ்​லிம் மத்​திய வக்பு வாரி​யத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. இதன் சார்​பில் நீதி​மன்ற தீர்ப்​பின்​படி சில மாதங்​களுக்​குள் இந்​தோ-இஸ்​லாமிய கலாச்​சார அறக்​கட்​டளை அமைக்​கப்​பட்​டது. இதன் பிறகு 6 ஆண்​டு​களாகி​யும் மசூ​திக்​கான கட்​டு​மானப் பணி தொடங்​கப்​பட​வில்​லை.

வரைபடம் நிராகரிப்பு: இரண்டு ஆண்​டு​களுக்கு முன்பு அயோத்தி மேம்​பாட்டு ஆணைய வலை​தளத்​தில் மசூ​தி​யின் வரைபடம் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டது. ஆனால், விதி​களின்​படி மசூ​திக்​கான துணை மற்​றும் நில ஆவணங்​களை அறக்​கட்​டளை சமர்ப்​பிக்​க​வில்​லை. இதன் விளை​வாக, வரைபடம் சில மாதங்​களில் உ.பி. அரசால் விதிப்​படி நிராகரிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து சன்னி வக்பு வாரி​யம் மற்​றும் அறக்​கட்​டளை​யின் தலை​வரு​மான ஜுபேர் அகமது பரூக்கி கூறுகை​யில், ‘‘உ.பி. அரசின் அனு​ம​திக்​காக சமர்ப்​பிக்​கப்​பட்ட வரைபடத்தை மாற்றி அமைக்க மும்​பை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் முடி​வானது. இதன் காரண​மாக நாங்​கள் துணை மற்​றும் நில ஆவணங்​களை சமர்ப்​பிக்​க​வில்​லை. உ.பி. அரசிடம் சமர்ப்​பிக்​கப்​பட்ட வரைபடத்​தில் இரண்டு ஓவல் வடிவ மினார்​கள் இருந்​தன. இதற்கு உறுப்​பினர்​கள் தெரி​வித்த எதிர்ப்​பால், 5 மினார்​கள் கொண்ட ஒரு குவி மாடம் கொண்ட வரைபடம் தயாரிக்​கப்​படு​கிறது. மசூ​தி​யின் மதிப்​பிடப்​பட்ட செலவு ரூ.65 கோடி. ஆனால், இன்​று​வரை ரூ.3 கோடி மட்​டுமே வசூலாகி​யுள்​ளது. எனவே மசூ​தி​யின் கட்​டு​மானம் தற்​போதைக்கு சாத்​தி​யமில்​லை’’ என்​றார்.

ஆர்வம் காட்டவில்லை: இப்​பிரச்​சினை​யில் தனிபூர்​வாசி​யான தவு​கீர் அலி கூறும்​போது, ‘‘உ.பி. சன்னி வக்பு வாரிய​மும், அறக்​கட்​டளை​யும் எதை​யும் செய்​யக்​கூ​டாது என்ற ஒரு அழுத்​தத்​தில் இருப்​பது போல் தெரி​கிறது. ஏனெனில், மசூ​திக்​கான நிலத்​தைப் பார்​வை​யிட வந்த முஸ்​லிம் செல்​வந்​தர்​கள் பலர் கட்​டிட நிதி அளிக்க விரும்​புவ​தாக எங்​களிடம் கூறினர். அவற்றை சிரத்​தை​யுடன் வசூல் செய்​வ​தில் அறக்​கட்​டளை​யினர்​ எந்​த ஆர்​வ​மும் காட்​ட​வில்​லை’’ என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here