ஐஎஸ்ஐ தொடர்பு குறித்து காங். எம்.பி. கவுரவ் கோகோயிடம் விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்

0
13

”​காங்​கிரஸ் எம்​.பி. கவுரவ் கோகோய், அவரது மனைவி எலிசபெத்​திடம் பாகிஸ்​தான் தொடர்பு குறித்து மத்திய ஏஜென்சி விசா​ரிக்க வேண்​டும்” என்று அசாம் முதல்​வர் ஹிமந்​த பிஸ்வா சர்மா வலி​யுறுத்தி உள்​ளார்.

அசாம் மாநிலத்​தின் காங்​கிரஸ் எம்​.பி.கவுரவ் கோகோய். இவரது மனைவி பிரிட்​டனைச் சேர்ந்த எலிசபெத் கோல்​பர்ன். இவர்​கள் இரு​வருக்​கும் பாகிஸ்​தானுடன் தொடர்பு இருப்​ப​தாக​ குற்றச்சாட்டு எழுந்​தது. பாகிஸ்​தானின் திட்​டக் குழு ஆலோ​சகர் தவ்​கீர் ஷேக்​கிடம், கவுரவ் மனைவி எலிசபெத் பணி​யாற்றி உள்ளார்.

பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அவர் வேலை செய்தபோது, அந்​நாட்​டின் உளவு அமைப்​பான ஐஎஸ்​ஐ-க்கு இந்தியா​வின் ரகசிய தகவல்​களை அவர் அளித்​தார் என்று குற்றச்சாட்டு எழுந்​தது. இது குறித்து விசா​ரணை நடத்தி அறிக்கை அளிக்க, அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சிறப்பு விசா​ரணை குழு அமைத்​தார். இந்​தக் குழு தீவிர விசாரணை நடத்தி 44 பக்க அறிக்​கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இதையடுத்து குவாஹாட்டியில் பத்​திரி​கை​யாளர்​களை நேற்று சந்​தித்த முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறிய​தாவது: காங்கிரஸ் எம்​.பி. கவுரவ், அவரது மனைவி எலிசபெத் மீது கூறப்பட்​டுள்ள குற்​றச்​சாட்​டு​கள் மிக​வும் தீவிர​மானவை. அவை நாட்​டின் பாது​காப்பு சம்​பந்​தப்​பட்​ட​வை. எனவே, இரு​வர் மீதான குற்​றச்​சாட்​டு​கள் குறித்து மத்​திய புல​னாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்​திய உள்​துறை அமைச்​சகத்​திடம் வலியுறுத்துவோம்.

பாகிஸ்​தான் நிறு​வனத்​திடம் இருந்து எலிசபெத் சம்​பளம் பெற்றுள்​ளதற்​கான ஆதா​ரங்​கள் கிடைத்​துள்​ளன. அத்​துடன் அமெரிக்க செனட்​டர் டாம் உடால் என்​பவரிடம் எலிசபெத் பணியாற்றி இருக்​கிறார். அத்​துடன், அமெரிக்க தொழில​திபர் ஜார்ஜ் சோரஸிட​மும் வேலை செய்​திருக்​கிறார். அட்​டாரி எல்லை வழி​யாக சாதாரண பெண்போல எலிசபெத் பாகிஸ்​தான் சென்று வந்துள்​ளார்.

கவுரவ் கோகோயை திரு​மணம் செய்த பிறகு, எலிசபெத் 9 முறை பாகிஸ்​தான் சென்று வந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு கவுரவ், எலிசபெத் இரு​வரும் பாகிஸ்​தான் பயணம் மேற்​கொண்​டனர். ராகுல் குடும்​பத்​துக்கு கவுரவ் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மிகவும் நெருக்​க​மானவர்​கள். இந்த விவ​காரத்​தில் ராகுல் கட்டாயம் பதில் அளிக்க வேண்​டும். இவ்​வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறி​னார்.

கவுரவ் மறுப்பு: இவரது குற்​றச்​சாட்டு குறித்து கவுரவ் கோகோய் தனது சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ”முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா​வின் பத்​திரி​கையாளர் சந்​திப்​பு, சூப்​பர் தோல்​வி” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here