டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மலேசியாவின் கோலாலம்பூரில் இந்த இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனை ஜி. திரிஷா 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய வங்கதேச அணி 18.2 ஓவர்களில் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் ஆயுஷி சுக்லா 3, சோனம் யாதவ், பருணிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர்.
Latest article
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த்...
குமரி: அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும், மே மாத விடுமுறையை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும்,...
உதயமார்த்தாண்டம்: அரசு பள்ளி கட்டிடம் எம்எல்ஏ திறப்பு
மிடாலம் ஊராட்சி, உதயமார்த்தாண்டம் அரசு தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள்...














