குமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவரின் கணவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி விபத்தில் உயிரிழந்தார். அவரது இழப்பீடு தொகையான ரூ. 1.30 கோடியை, அந்த பெண்ணுடன் பழகி வந்த தோழிகள் சிலர் முதலீடு செய்வதாக கூறி மோசடி செய்துள்ளனர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று ரம்யா, ஸ்ரீகலா உள்ளிட்ட 3 இளம் பெண்களை கைது செய்தனர்.
