ராணுவத்துக்கு மதம், ஜாதி கிடையாது: ராகுல் கருத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில்

0
9

 ராணுவத்​துக்கு மதம், ஜாதி ஆகியவை கிடை​யாது என ராகுல் கருத்​துக்கு பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பதில் அளித்​துள்​ளார்.

பிஹார் மாநிலம் அவுரங்​கா​பாத்​தில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​னார். அப்​போது அவர் கூறுகை​யில், ‘‘ நாட்​டில் உயர் வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள் 10 சதவீதம் பேர் உள்​ளனர்.

இவர்​கள் கட்​டுப்​பாட்​டில்​தான் கார்​பரேட் நிறு​வனங்​கள், அரசு நிர்​வாகம், நீதித்​துறை, ராணுவ​மும் கூட இந்த 10 சதவீதத்​தினர் கட்​டுப்​பாட்​டில்​தான் உள்​ளது. மீதம் உள்ள 90 சதவீதம் பேர் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், எஸ்​.சி, எஸ்டி பிரி​வினர் மற்​றும் இதர சிறு​பான்​மை​யினர்.

அதனால்​தான் நாங்​கள் சமூக நீதி, சம வாய்ப்​புக்கு தேசி​யள​வில் ஜாதி ரீதி​யான மக்​கள் தொகை கணக்​கெடுப்பு தேவை என கோரிக்கை விடுக்​கிறோம்’’ என்​றார்.

ராகுலின் இந்த கருத்​துக்கு பதில் அளித்​துள்ள பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கூறிய​தாவது: ராணுவத்​தி​லும் இட ஒதுக்​கீடு முறையை கொண்​டு​வந்து ஒழுங்​கற்ற தன்​மையை ஏற்​படுத்த ராகுல் காந்தி முயற்​சிக்​கிறார். அவர் ராணுவத்தை அரசி​யலுக்​குள் இழுக்க முயற்​சிக்​கிறார்.

இட ஒதுக்​கீடு இருக்க வேண்​டும். பாஜக.,​வும் இடஒதுக்​கீட்டுக்கு ஆதர​வானது​தான். ஏழைகளுக்கு நாங்​கள் இட ஒதுக்​கீடு வழங்​கி​யுள்​ளோம். ஆனால் நமது ராணுவ வீரர்​களுக்கு ஒரே ஒரு மதம்​தான்.

ராணுவ நடத்தை விதி​முறை​தான் அவர்​களின் மதம். நாடு நெருக்​கடியை சந்​திக்​கும்​போதெல்​லாம் நமது வீரர்​கள் தங்​களின் வீரம் மூலம் நாட்டை தலை நிமிரச் செய்​துள்​ளனர். ஜாதி, மத ரீதியி​லான அரசி​யல் நாட்​டுக்கு தீங்கை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அனைத்து தரப்​பினரும் முன்​னேற வேண்​டும் என்​பது​தான் நமது எண்​ணம். பாகு​பாட்டை ஏற்​படுத்த நாங்​கள் விரும்​ப​வில்​லை. இவ்​வாறு ராஜ்​நாத்​ சிங்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here