அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்கு உட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை அபர்ணா பாலமுரளி இடம்பெற்றுள்ளார். இவருடன் இந்தி நடிகர் ரோஹித் சரஃபும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர்களின் பிரபல தன்மையை கணக்கில் கொண்டு இந்தப் பட்டியலில் இவர்கள் இடம் பிடித்துள்ளனர். அபர்ணா பாலமுரளி, கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’, மலையாளத்தில் ‘கிஷ்கிந்தா காண்டம்’, ‘ருதிரம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
Latest article
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஆட்டோ ஓட்டுநர் டென்னிஸ் ஏசுவடியான், தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது, மேலராமன்புதூரைச் சேர்ந்த சோபிகுமார் என்பவர் வழிமறித்து, முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்....
குளச்சல்: கஞ்ச வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது
குளச்சல் போலீசார் நேற்று கொட்டில்பாடு, நவஜீவன் காலனி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சஜின், சிவிசன், பிரின்ஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கில் தப்ப முயன்றனர். அவர்களை நிறுத்தி சோதனை...
அருமனை: 2ம் மனைவி பிரிந்ததால் வாலிபர் விஷம் குடித்து சாவு
அருமனை பகுதியை சேர்ந்த பிபின் (29), ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வேலை செய்து வந்த நிலையில், முதல் மனைவி பிரிந்து சென்றார். சேலத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்....








