Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

நாகர்கோவிலில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

0

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், பணிக்கொடையாக ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி. ஐ. டி. யூ. மாவட்ட செயலாளர் ஸ்டாலின்தாஸ் தொடக்க உரையாற்றினார். மாநில செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version