திரை கவர்ச்சிக்கு பின்னால் அறிவார்ந்த சமூகம் ஓடுகிறது: சீமான் விமர்சனம்

0
19

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்​சிக்கு பின்​னால் ஓடு​வது அசிங்கமானது.

சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை எதிர்க்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள 1.25 கோடி வட இந்​தி​யர்​களுக்கு வாக்​குரிமை கொடுத்​தால் தமிழ் சமூகத்​தினர் பாதிக்​கப்​படு​வார்​கள். பாஜக​வுடன் கூட்டணி வைத்​துள்​ள​தால் அதி​முக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.

கரூர் விவ​காரத்​தில் தவெக மாவட்​டச் செய​லா​ளர், பொதுச் செய​லா​ளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால், சம்​பவம் நடை​பெறக் காரண​மாக இருந்​தவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்​யப்​பட​வில்​லை? விசா​ரணை நடை​பெறும் சூழலில், பாதிக்​கப்​பட்​ட​வர்​களை விஜய் சந்​தித்​துப் பேசுவது சரி​யா? பாஜக கூட்​ட​ணி​யில் சேர்ப்​ப​தற்​காகவே விஜய், ஆதவ் அர்​ஜுனா விட்டு வைத்​திருக்​கிறார்​கள். கூட்​ட​ணி​யில் விஜய் சேர​வில்லை என்​றால் வழக்கு பதிவு செய்​வார்​கள். இவ்​வாறு சீமான் கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here