எல்லையை மாற்றியதால் தொல்லையில் ஆலங்குளம் திமுக! – எதிர்பார்த்துக் காத்திருப்பவரை ஏமாற்றிவிடுமா தொகுதி பிரிவினை?

0
15

தென்காசி தெற்கு மாவட்ட திமுக எல்லைக்குள் இருந்த ஆலங்குளம் தொகுதியை நெல்லை திமுக உட்கட்சி உரசல்கள் காரணமாக, அண்மையில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக எல்லைக்குள் மாற்றிவிட்டது திமுக தலைமை. இதனால், இம்முறை ஆலங்குளத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்.

தென்​காசி வடக்கு மாவட்ட திமுக​வின் கட்​டுப்​பாட்​டில் சங்​கரன்​கோ​வில், வாசுதேவநல்​லூர் தொகு​தி​கள் உள்​ளன. இதன் செய​லா​ள​ராக சங்​கரன்கோவில் எம்​எல்​ஏ-​வான ஈ.ராஜா இருக்​கிறார். தென்​காசி தெற்கு மாவட்ட திமுக​வின் கட்​டுப்​பாட்​டில் ஆலங்​குளம், தென்​காசி, கடையநல்​லூர் தொகு​தி​கள் இருந்​தன. இதன் செய​லா​ள​ராக வே.ஜெய​பாலன் இருக்​கிறார். இதில் ஆலங்​குளம் தொகு​தியை அண்​மை​யில் நெல்லை மேற்கு மாவட்​டத்​தில் சேர்த்​து​விட்​டது தலை​மை. இது​தான் ஜெய​பாலனுக்கு இப்​போது சிக்​கலாகி​விட்​டது.

கடந்த 2021 தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் ஆலங்​குளம், சங்​கரன்​கோ​வில் தொகு​தி​களில் திமுக போட்​டி​யிட்​டது. வாசுதேவநல்​லூரில் மதி​முக​வும், தென்​காசி​யில் காங்​கிரஸும் கடையநல்​லூரில் முஸ்​லிம் லீக்​கும் போட்​டி​யிட்​டன. இம்​முறை​யும் திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் தங்​களுக்கு அதே தொகு​தி​களை உறுதி செய்​யும் என்​கிற கணிப்பு இருப்​ப​தால் எஞ்​சிய சங்​கரன்​கோ​வில், ஆலங்​குளம் தொகு​தி​கள் மட்​டுமே திமுக​வுக்கு வழக்​கம் போல் மிஞ்​சும். இதில் சங்​கரன்​கோ​வில் தொகு​தியை சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான ராஜா மாவட்​டச் செய​லா​ள​ராக இருப்​ப​தால் அவருக்கே ஒதுக்​கி​விடும் தலை​மை.

எஞ்​சிய ஒரு தொகு​தி​யான ஆலங்​குளம் தனக்​குக் கிடைக்​கும் என நினைத்​துக் கொண்​டிருந்​தார் தென்​காசி தெற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஜெய​பாலன். ஆனால், அந்​தத் தொகுதி இப்​போது திருநெல்​வேலி மேற்கு மாவட்​டத்​துடன் சேர்க்​கப்​பட்​டு​விட்​ட​தால் அதன் செய​லா​ளர் ஆவுடையப்​பனின் தயவை எதிர்​பார்க்க வேண்​டிய கட்​டா​யத்​துக்கு ஆளாகி இருக்​கிறார் ஜெய​பாலன்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய தென்​காசி தெற்கு மாவட்ட திமுக​வினர், “ஆலங்​குளத்​தின் தற்​போதைய எம்​எல்​ஏ-​வாக மனோஜ் பாண்​டியன் இருக்​கிறார். ஓபிஎஸ் அணி​யில் இருக்​கும் இவர் புதி​தாக ஒரு சின்​னத்​தில் இம்​முறை போட்​டி​யிட்​டால் திமுக​வுக்கு வாய்ப்பு பிர​காசிக்​கும். அதனால் இம்​முறை ஆலங்​குளத்​துக்கு கடும் போட்டி நில​வு​கிறது. பழையபடியே தென்​காசி தெற்கு மாவட்​டத்​துக்​குள்​ளேயே ஆலங்​குளம் இருந்​திருந்​தால் ஜெய​பாலனுக்கு ரூட் க்ளிய​ராகி இருக்​கும். ஆனால், இப்​போது அவர் அப்​படி எதிர்​பார்க்க முடி​யாது.

இதைப் புரிந்​து​கொண்டு முன்​னாள் மாவட்​டச் செய​லா​ளர் சிவ பத்​ம​நாதன், முன்​னாள் அமைச்​சர் பூங்​கோதை ஆலடி அருணா, அவரது சகோ​தரர் ஆலடி எழில்​வாணன், தொகுதி பொறுப்​பாளர் கணேஷ்கு​மார் ஆதித்​தன் உள்​ளிட்​டோர் ஆலங்​குளத்​துக்கு அடி​போட ஆரம்​பித்​து​விட்​டார்​கள். இவர்​களுக்கு மத்​தி​யில் ஜெய​பாலனும் முயற்​சி​யில் இருக்​கிறார்.

இதில், சிவ பத்​ம​நாதனும் கணேஷ்கு​மார் ஆதித்​தனும் நெல்லை மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆவுடையப்​பனின் விசு​வாசிகள் என்​ப​தால் இவர்​களுக்கு கூடு​தல் வாய்ப்பு இருக்​கிறது. இதைத் தவிர, கடந்த கால கசப்​பான நிகழ்​வு​களை புறந்​தள்​ளி​விட்டு பூங்​கோ​தைக்கு கனி​மொழி சிபாரிசு செய்​தால் அவரும் ஆலங்​குளத்​துக்​கான ரேஸில்​ இருப்​பார்​” என்​கிறார்​கள்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here