ஆலங்குளமா… அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் வருகையால் திமுகவுக்குள் பரபர விவாதம்

0
13

ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்​துக் கொண்ட மனோஜ் பாண்​டியன், ஓபிஎஸ்​ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்​காக இருப்​ப​தால் தனக்​கான வழியைத் தேடிப் புறப்​பட்டு திமுக​வில் கலந்​து​விட்​டார்.

மனோஜ் பாண்​டிய​னுக்கு தேர்​தலில் சீட் உறுதி என்று உத்​தர​வாதம் அளித்​துத்​தான் அவரை திமுக​வுக்கு அழைத்து வந்​தா​ராம் அமைச்​சர் சேகர் பாபு. இந்த நிலை​யில், ஏற்​கெனவே ஆலங்​குளத்​தில் வெற்​றி​பெற்ற மனோஜ் பாண்​டிய​னுக்கு இந்த முறை அந்​தத் தொகு​திக்​குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை பேசி​வைத்​திருப்​ப​தாக வந்து விழும் செய்​தி​கள், அம்​பாச​முத் திரத்​தில் மூன்று முறை தோற்​றும் அந்தத் தொகு​திக்​காக இன்​ன​மும் காத்​திருக்​கும் முன்​னாள் சபா​நாயகர் இரா.ஆவுடையப்​பன் வகையறாக்​களை கொஞ்​சம் திகைக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய நெல்லை மேற்கு மாவட்ட திமுக​வினர், “அம்​பாச​முத்​திரத்​தில் ஆவுடையப்​பன் தொடர்ச்​சி​யாக 3 முறை போட்​டி​யிட்டு தோல்​வியடைந்​துள்​ளார். மீண்​டும் அவரை அங்கு நிறுத்​தி​னால் ஜெயிப்​பது சிரமம் என்​ப​தால் தலைமை மனோஜ் பாண்​டியனை சாய்​ஸாக எடுத்திருக்​கலாம்.

அம்​பாச​முத்​திரத்​தில் நாடார் மற்​றும் முக்​குலத்​தோர் சமு​தாய மக்​களின் வாக்​கு​கள் அதி​க​மாக உள்​ளன. மனோஜ் நாடார் சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​பதுடன் அனைத்​துத் தரப்​பினருட​னும் நட்​பாக இருப்​பவர். அது​வுமில்​லாமல், அவரது தந்தை பி.ஹெச்​.​பாண்​டிய​னுக்கு என இந்​தப் பகு​தி​யில் தனித்த செல்​வாக்கு இருக்​கிறது.

ஆலங்​குளம், அம்​பாச​முத்​திரம் இதில் எங்கு போட்​டி​யிட்​டாலும் மனோஜ் பாண்​டியன் எளி​தில் வெற்​றி​பெறு​வார். அதனால் திமுக தலை​மை, தோற்றுக் கொண்டே இருக்​கும் அம்​பாச​முத்​திரத்தை அவருக்கு ஒதுக்க முடி​வெடுத்​திருக்​கலாம். அதேசம​யம், இத்​தனை நாளும் தென்​காசி தெற்கு மாவட்ட திமுக​வில் இருந்த ஆலங்​குளம் தொகு​தியை அண்​மை​யில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக-வுக்​குள் சேர்த்த தலை​மை, இந்த மாவட்டத்தின் செய​லா​ள​ராக ஆவுடையப்​பனை நியமனம் செய்​தது.

ஆலங்​குளம் தொகு​தி​யில் நாடார்​களுக்கு அடுத்​த​படி​யாக முக்​குலத்​தோர் அதி​க​மாக இருக்​கி​றார்​கள். 2021 தேர்​தலில் இங்கே பனங்​காட்டு படை கட்சியின் தலை​வர் ஹரி நாடார் தனி​யாக போட்​டி​யிட்டு சுமார் 37 ஆயிரம் வாக்​கு​களை பிரித்து 3-ம் இடம் பிடித்​தார். இம்​முறை​யும் ஹரி நாடார், ராக்​கெட் ராஜா உள்​ளிட்ட நாடார் சமூகத்து பிரபலங்​கள் போட்​டி​யிடலாம் எனப் பேச்சு இருக்​கிறது. அப்​படி அவர்​கள் களமிறங்​கி​னால், நாடார் சமூகத்து வாக்​கு​கள் சிதறும். அந்த வாய்ப்பை சரி​யாகப் பயன்​படுத்​திக் கொள்​ளும் வித​மாக முக்​குலத்​தோர் சமூகத்​தைச் சேர்ந்த ஆவுடையப்​பனை ஆலங்​குளத்​தில் நிறுத்தி ஆழம் ​பார்க்க திமுக தலைமை திட்​ட​மிடலாம்” என்​றார்​கள்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here