அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அடைக்காக்குழி 2-வது வட்டார மாநாடு நேற்று நடைபெற்றது. குளோரிபாய் கொடியேற்றினார். வட்டார தலைவர் கெப்சி மேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெகுபதி துவக்கவுரை ஆற்றினார். விவாதத்துக்கு பின் 15 பேர் கொண்ட புதிய வட்டார குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக கெப்சி மேரியும் செயலாளராக தீபா மற்றும் பொருளாளராக ரெஞ்சிதம் உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவர் மேரிஸ் டெல்லா பாய் நிறைவுரை ஆற்றினார். ரெஞ்சிதம் நன்றியுரை ஆற்றினார்.














