எஸ்ஐஆரை ஆதரித்து வழக்கு போட்ட ஒரே கட்சி அதிமுக! – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

0
14

“வாக்​குரிமையை பறிப்​ப​தற்கு துணை போகும் பாஜக சதி​யில் எடப்​பாடி பழனி​சாமி​யும் ஒரு பார்ட்​னர். இந்​தி​யா​விலேயே எஸ்ஐ ஆரை ஆதரித்து வழக்கு தாக்​கல் செய்த ஒரே கட்சி அதி​முக​தான் என்ற வரலாற்றை எழு​திக் கொண்​டிருக்​கி​றார் பழனி​சாமி” என்று அமைச்​சர் ரகுபதி விமர்​சித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​திருந்​த​தாவது: சரி​யான வாக்​காளர் பட்​டியலுடன் முறை​கேடு​கள் இல்​லாத தேர்​தலை நடத்​த​வும், அதற்​காக வாக்​காளர் பட்​டியலில் திருத்​தம் மேற்​கொள்ள வேண்​டும் என்​ப​தி​லும் திமுக-வுக்கு எப்​போதுமே மாற்​றுக் கருத்து இல்​லை. ஆனால், தமிழ்​நாட்​டில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குச் சில மாதங்​களே உள்ள நிலை​யில், போது​மான கால அவகாசம் தரா​மல், அவசர அவசர​மாக எஸ்​ஐஆர் பணியை தேர்​தல் ஆணை​யம் மேற்​கொள்​வ​தில் உள்​நோக்​கம் இருக்​கிறது என்​ப​தாலேயே திமுக எதிர்க்​கிறது.

பாஜக-வுக்கு எதி​ரான வாக்​காளர்​களை நீக்​கம் செய்​யும் சதி​யைத் தடுக்​க​வும், தமிழ்​நாட்டு மக்​களின் வாக்​குரிமை​யைப் பாது​காக்​க​வும், எஸ்​ஐஆருக்கு எதி​ராக அனைத்து மாவட்​டத் தலைநகரங்​களி​லும் கண்டன ஆர்ப்​பாட்​டங்​களைக் கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் இணைந்து நடத்​தி​யிருக்​கிறது திமுக. அனைத்​துக் கட்​சிக் கூட்​டம் நடத்​தி, ஜனநாயகத்​தின் அடிப்​படை​யான வாக்​குரிமை​யைப் பறிக்​கும் எஸ்ஐ ஆரை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக வழக்​கும் தொடர்ந்​துள்​ளது.

ஆரி​யம், திரா​விடம் பற்றி கேட்​டால், “அதற்​கெல்​லாம் புராணம் படிக்க வேண்​டும்; ஆய்வு செய்ய வேண்​டும்” எனச் சொன்ன பழனி​சாமிக்​கு, ஜனநாயகம் பற்றி மட்​டும் தெரிந்​து​விடு​மா? ஜனநாயகத்​தின் மீது கொஞ்​ச​மும் அக்​கறை இல்​லாத அதி​முக, தமி​ழர்​களின் வாக்​குரிமை​யைப் பற்​றியா கவலைப்​படும்? தமி​ழர்​களின் வாக்​குரிமை காப்​பாற்​றப்பட வேண்​டும் எனத் தெரு​வில் இறங்கி ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வது தொடங்​கி, உச்ச நீதி​மன்​றத்​தின் கதவைத் தட்​டு​வது வரை திமுக போராடிக் கொண்​டிருக்​கிறது. ஆனால் அதி​முக-வோ, எஸ்​ஐஆரை ஆதரித்து வழக்கு தொடர்ந்​திருக்​கிறது.

‘உங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை’ எனச் சொல்லி வாக்குரிமையைப் பறிப்பதற்குத் துணை போகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். பாஜக கூட எஸ்ஐஆரை ஆதரித்து வழக்குப் போடாத நிலையில், பாஜக-வின் கிளைக் கழகமாகவே செயல்படும் அதிமுக-வும் பழனிசாமியும் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள். ‘இந்தியாவிலேயே கார் வைத்திருக்கும் கரகாட்ட கோஷ்டி நாம்தான்’ என்ற காமெடி போல, இந்தியாவிலேயே எஸ்ஐஆரை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

தேர்​தலில் தோற்​று​விடு​வோம் என்ற உண்மை தெரிந்​து​விட்​ட​தால், எஸ்​ஐஆர் மூலம் வெற்றி பெற்​று​விடலாம் என பாஜக-வை நம்​பி, சித்து விளை​யாட்​டில் இறங்​கி​யிருக்​கி​றார் துரோகம் செய்​வ​தில் முனை​வர் பட்​டம் பெற்ற பழனி​சாமி. கூவத்​தூரில் முதல்​வர் ஆனது போல, எஸ்​ஐஆர் மூலம் கொள்​ளைப்​புற முதல்​வ​ராகத் துடிக்​கி​றார். பாஜக-​வின் வாக்​குத் திருட்டு வியூ​கம் அதி​முக-வுக்கு பயன்​படும் என்ற நப்​பாசை​யில் எஸ்​ஐஆரை ஆதரிக்​கி​றார் பழனி​சாமி.

முஸ்​லிம்​களைப் பாதிக்​கும் வகை​யில் மோடி அரசு கொண்டு வந்த சிஏஏ சட்​டத்தை ஆதரித்​து​விட்​டு, “இத​னால் முஸ்​லிம்​களுக்கு எந்​தப் பாதிப்​பும் இல்​லை” எனப் பச்​சைப் பொய் சொன்ன பழனி​சாமி​தான், அந்த சிஏஏ சட்​டத்தை எஸ்​ஐஆர் வழி​யாக அமல்​படுத்​தத் துடிக்​கும் பாஜக-வுக்​குத் துணை போகி​றார். எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யால் தமி​ழர்​களின் வாக்​குரிமைக்கு மட்​டுமல்​ல… அவர்​களின் குடி​யுரிமைக்கே ஆபத்து ஏற்​படலாம் என்​கிற பேராபத்து சூழ்ந்​திருக்​
கிறது.

வேளாண் சட்​டம், உதய் மின் திட்​டம், மதுரை அரிட்​டாப்​பட்டி டங்​ஸ்​டன் சுரங்​கப் பிரச்​சினைக்கு காரண​மான ‘மைன்ஸ் அண்ட் மினரல்​ஸ்’ திருத்​தச் சட்​டம், குடி​யுரிமை திருத்​தச் சட்​டம் உள்​ளிட்ட ஒன்​றிய பாஜக அரசு கொண்டு வந்த சட்​டங்​களை​யும் திட்​டங்​களை​யும் கண்ணை மூடி ஆதரித்த எடப்​பாடி பழனி​சாமி, தற்​போது எஸ்​ஐஆரிலும் “ஆலம்​பனா நான் உங்​கள் அடிமை” என முன்​னுக்கு வந்து நிற்​கி​றார்.

பிஹாரில் எஸ்​ஐஆர் பணி நடை​பெற்ற போது, பாஜக-​வின் கூட்​ட​ணி​யில் இடம் பெற்ற ஐக்​கிய ஜனதா தளம் வழக்கு தாக்​கல் செய்​ய​வில்​லை. பாஜக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்ற ஆந்​திர மாநிலத்​தின் தெலுங்கு தேசம் கட்சி எஸ்​ஐஆரை ஆதரித்து வழக்​குப் போட​வில்​லை. மாறாக, இஸ்​லாமியர்​களின் குடி​யுரிமையை சோதிக்​கும் வகை​யில் எஸ்​ஐஆர் நடவடிக்​கையை தேர்​தல் ஆணை​யம் பயன்​படுத்​தக் கூடாது என்று கவலை தெரி​வித்​துள்​ளது. ஆனால், பழனி​சாமி, எஸ்​ஐஆரை ஆதரித்​ததோடு, வழக்​குப் போட்டு ராஜ விசு​வாசத்​தை​யும் காட்​டு​வது வெட்​கக்​கேடு.

மக்​களைப் பற்​றி​யும் மக்​கள் நலனைப் பற்​றி​யும் துளி​யும் கவலை​யில்​லாமல் டெல்லி எஜமானர்​களின் மனம் குளிர மட்​டுமே சேவகம் செய்து வரும் பழனி​சாமி, தனது கட்​சியை அடமானம் வைத்​தது மட்​டுமின்​றி, தமி​ழர்​களின் வாக்​குரிமை​யைப் பறித்து தமிழ்​நாட்டை டெல்​லி​யின் அடிமை​யாக்க முயல்​கி​றார். இந்​தச் செயலுக்கு தமிழ்​நாட்டு மக்​கள் தக்க பதிலடி கொடுப்​பார்​கள்.இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here