டி 20 தொடரில் அபிஷேக் சர்மா சவால் அளிப்பார்: ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் கருத்து 

0
23

5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா எங்​களுக்கு சவால் கொடுப்​பார் என ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் மிட்​செல் மார்ஷ் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது. இந்த போட்​டியையொட்டி நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் மிட்​செல் மார்ஷ் கூறிய​தாவது: கடந்த இரண்டு டி 20 உலகக் கோப்​பைத் தொடர்​கள் ஆஸ்​திரேலிய அணிக்கு சிறப்​பான​தாக அமைய​வில்​லை. அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள டி20 உலகக் கோப்​பையை வெல்​லும் அளவுக்கு சவால் மிகுந்த அணி​யாக நாங்​கள் இருக்க வேண்​டும். பேட்​டிங்​கில் நாங்​கள் மிக​வும் அதிரடி​யாக விளை​யாடி வரு​கிறோம். கடந்த சில ஆண்​டு​களாக பல அணி​களின் இயல்பு இது​தான்.

டி20 உலகக் கோப்​பைத் தொடர் இந்​தி​யா​வில் நடை​பெற உள்​ளது. உலகக் கோப்​பைத் தொடரில் அதிரடி​யாகவே விளை​யாட​வுள்​ளோம். எல்லா முறை​யும் போட்​டிகளின் முடிவு​கள் எங்​களுக்கு சாதக​மாக இருக்​காது. நாங்​கள் தோல்வி​களை சந்​திக்க நேரிடும். ஆனால், நாங்​கள் எப்​படி விளை​யாட வேண்​டும் என்​ப​தில் தெளி​வாக இருக்​கிறோம். அதிரடி​யாக விளை​யாடு​வது எங்​களுக்​கான வெற்றி வாய்ப்பை அதி​கரிக்​கும்.

இந்​திய அணி மிக​வும் அற்​புத​மான அணி. இந்​திய அணி மீது எங்​களுக்கு மிகுந்த மரி​யாதை இருக்​கிறது. இந்​தியா – ஆஸ்​திரேலியா இடையே​யான 5 போட்​டிகள் கொண்ட டி20 தொடர் ரசிகர்​களுக்கு மிகுந்த உற்​சாகத்தை அளிக்​கும் என நினைக்​கிறேன். இரண்டு சிறந்த அணி​கள் மோதிக்​கொள்​வ​தால், இந்த சவாலை எதிர்​கொள்ள ஆவலோடு காத்​திருக்​கிறேன். அழுத்​தத்​தின் கீழ் எப்​படி செயல்​படு​கிறோம் என்​பது​தான் முக்​கி​யம்.

அபிஷேக் சர்​மா, இந்​திய அணிக்கு சிறந்த அடித்​தளம் அமைத்​துக்​கொடுக்​கிறார். சிறிது கால​மாக அவர், ஐபிஎல் தொடரில் சன்​ரைசர்ஸ் அணிக்​காக நம்​ப​முடி​யாத அளவுக்கு சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார். இதனால் எங்​களுக்கு எதி​ரான டி 20 தொடரில் அவர், சவால் அளிப்​பார். எந்த வீரரும் உலகின் சிறந்த அணிக்கு சவால் கொடுக்​கவே விரும்​பு​வார்​கள். அபிஷேக் சர்மா அப்​படிப்​பட்​ட​வர்​களில் ஒரு​வர் என்​பது எங்​களுக்​குத் தெரி​யும்​.
இவ்​வாறு மிட்​செல் மார்ஷ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here